இராஜபாளையம் பெண்களின் அழகை ரசித்தேன். விஷால்

  • IndiaGlitz, [Tuesday,May 17 2016]

விஷால், ஸ்ரீதிவ்யா, நடிப்பில் வரும் 20ஆம் தேதி வெளியாகவுள்ள 'மருது' திரைப்படத்தின் பெரும்பாலான பகுதியின் படப்பிடிப்புகள் இராஜபாளையத்தில்தான் நடைபெற்றது. இயக்குனர் முத்தையாவின் சொந்த ஊர் என்பதால் அந்த ஊரின் இண்டு இடுக்கெல்லாம் அவருக்கு அத்துபடி, என்றும், அந்த ஊரையே அவர் ஒரு பிலிம் சிட்டியாக மாற்றிவிட்டதாகவும் விஷால் கூறியுள்ளார்.

மேலும் ராஜபாளையம் என்றாலே நாய்களுக்குப் புகழ்பெற்றது என்று கூறுவார்கள். ஆனால் அந்த ஊர் அழகான பெண்களுக்கும் பெயர் பெற்றது. அங்கு அழகழகான பெண்களைக் கண்டு வியந்தேன். ரசித்தேன்.

இந்த படத்தில் ராதாரவி, சூரி ஆகிய இருவருமே முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். ராதாரவியுடன் நடிப்பதில் எனக்கு எந்த தயக்கவும் இருந்ததில்லை. நடிகர் சங்க தேர்தலை அவர் ஒரு கோணத்தில் பார்த்தார். நான் ஒரு கோணத்தில் பார்த்தேன். அவ்வளவுதான்

மேலும் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கும் ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் பேய் என்றும் ராட்சசன் என்றும் கூறலாம். அந்த அளவுக்கு அவர் வெளுத்து வாங்கியுள்ளார். இந்த படம் எனக்கு மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் திருப்தியான படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.

More News

பிளஸ் 2 மாணவர்களுக்கு நடிகர் சதீஷ் அறிவுரை

இன்று காலை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. மாணவர்கள் தங்கள் முடிவுகளை தெரிந்து கொண்டு வருகின்றனர்...

'தெறி'யை அடுத்து பஸ்ஸில் பிடிபட்ட 'மனிதன்'

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் சட்டவிரோதமாக பேருந்தில் ஒளிப்பரப்பாகியதை விஜய் ரசிகர் ஒருவர்...

சூர்யா எழுதிய மன்னிப்பு கடிதம்

நடிகர் சூர்யாவின் '24' திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் பொதுமக்களுக்கு அவர் ஒரு மன்னிப்பு கடிதத்தை எழுதியுள்ளார்...

சூர்யாவின் '24'. அமெரிக்கா-கனடா வசூல் விபரங்கள்

சூர்யா நடிப்பில் கடந்த 6ஆம் தேதி வெளியான '24' திரைப்படம் தமிழகம் மற்றும் தெலுங்கு மாநிலங்களில் நல்ல வரவேற்பை...

விஜய்யின் தெறி: சென்னை வசூல் நிலவரம்

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகி ஒரு மாதத்தை கடந்தும் சென்னையில்...