அஜித்-விஜய் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். விஷால்

  • IndiaGlitz, [Wednesday,April 27 2016]

சமீபத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்த நடிகர் சங்க நிர்வாகிகள் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பில் விஷால் பேசியபோது, "நடிகர் சங்க நிர்வாகிகள் அனைவரும் நடிகர்களின் நலனுக்காக கடுமையாக உழைத்து வருகின்றனர். அவர்களது உழைப்பிற்கு தலைவணங்குகிறேன்.


நடிகர் சங்கத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களையும் சமமாக மதிக்கின்றேன். குறிப்பாக அஜித் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். எனக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகிய அனைவர் மீதும் மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு. அனைவரையும் சமமாகத்தான் நான் நினைத்து வருகிறேன். மேலும் சங்க நிர்வாகிகளுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் முழு ஆதரவு கொடுத்து வருகின்றனர். அவர்களுடை ஒத்துழைப்புடன் நாங்கள் எங்கள் பணிகளை சிறப்பாக செய்வோம்'என்று விஷால் கூறியுள்ளார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கார்த்தி, 'நடிகர் சங்கத்தின் கட்டிடம் கட்டுவதற்காக நாங்கள் அனைவரும் இணைந்து ஒரு திரைப்படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரும்' என்று கூறினார்.

More News

என்னை விட இதற்கு சரியான ஆளு அஜித் மட்டும் தான் : சூப்பர் ஸ்டார்

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், வேதிகா நடிப்பில் பி.வாசு இயக்கிய 'ஷிவலிங்கா' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்...

சூர்யாவுக்கு அடுத்து அல்லு அர்ஜுன் தான். '24' விக்ரம்குமார்

'ஆத்ரேயா' உள்பட மூன்று வித்தியாச வேடங்களில் சூர்யா நடித்துள்ள '24' திரைப்படத்தை இயக்கிய விக்ரம்குமார்...

'ஜித்து ஜில்லாடி'யை அடுத்து தேவா பாடிய குத்துப்பாடல்

ஆறே நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை புரிந்த 'தெறி' படத்தில் இடம்பெற்ற 'ஜித்து ஜில்லாடி' என்ற சூப்பர் ஹிட் பாடலை பாடிய தேவா, கருணாகரனுக்காக ஒரு குத்துப்பாடலை பாடியுள்ளார்...

மீண்டும் வருவது யாரென்று தெரிகிறதா? கமலின் அடுத்த பட அழைப்பிதழ்

உலக நாயகன் கமல்ஹாசனின் அடுத்த படத்தின் தொடக்கவிழா நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 29-ஆம் தேதி நடிகர் சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் தொடங்கவுள்ளது...

ஒரே படத்தில் சூர்யா-கார்த்தி-விஷால்

சமீபத்தில் நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் மூலம் கிடைத்த லாபத்தில் நடிகர் சங்கத்தின் கடன் அடைக்கப்பட்டதும் மீதிப்பணம்...