அங்கன்வாடி பள்ளியில் கலெக்டர் மகள்: ஆச்சரியத்தில் பொதுமக்கள்

  • IndiaGlitz, [Saturday,February 17 2018]

நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களே இந்த காலத்தில் ஆயிரக்கணக்கிலும், லட்சக்கணக்கிலும் கட்டணம் கட்டி தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜியில் சேர்த்து வரும் நிலையில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிவஞானம் தனது செல்ல மகளை அரசு அங்கன்வாடி மையத்தில் சேர்த்துள்ளார். மேலும் அவரே தினமும் அங்கன்வாடி மையத்துக்கு வந்து தனது குழந்தையை அழைத்து வருகிறார். இதனை அந்த பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்

இதுகுறித்து  விருதுநகர் அங்கன்வாடி மைய ஊழியர்கள் கூறியபோது, 'கலெக்டர் அவர்கள் தனது குழந்தையை எங்கள் அங்கன்வாடியில் சேர்த்தது எங்கள் அனைவருக்கும் பெருமையாக உள்ளது. அவரை பின்பற்றி அனைத்து அரசு ஊழியர்களும் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையத்தில் சேர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றோம்' என்று கூறினர்

மேலும் விருதுநகர் கலெக்டர் சிவஞானம், அருகில் உள்ள கிராமங்களில் நடைபெறும் குறைதீர்க்கும் கூட்டங்களுக்கு தனது அதிகாரிகளுடன் அரசு பேருந்தில் செல்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.