விரலை விட்டு பெண்ணின் கன்னித்தன்மையை சோதிக்கும் கொடூரம்… இராணுவத்தில் இப்படியுமா?

  • IndiaGlitz, [Saturday,August 14 2021]

 

இந்தோனேசிய இராணுவத்தில் சேரும் பெண்களுக்கு உலகத்திலேயே கொடூரமான ஒரு சோதனை முறை இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்ததாகத் தகவல் கூறப்படுகிறது.

அதாவது இந்தோனேசிய இராணுவத்தில் சேரும் பெண்களின் ஒழுக்கத்தை முழுவதும் தெரிந்து கொள்வதற்காக அந்தப் பெண்ணின் பிறப்புறுப்பில் இரண்டு விரல்களைவிட்டு கன்னித்திரை கிழிந்து விட்டதா? எனச் சோதித்துப் பார்ப்பார்களாம். அப்படி ஒருவேளை கிழிந்து இருந்தால் அவர்கள் இராணுவத்தில் சேருவதற்கு தகுதியில்லை என முடிவுக்கட்டப்படுமாம்.

காட்டுமிராண்டித்தனமான இந்த சோதனை முறைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த சோதனை முறை விலக்கிக் கொள்ளப்பட்டு விட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இதைத்தவிர ஒரு பெண் உடலுறவு வைத்துக்கொண்டாரா? என்பதை அவரது கன்னித்திரையை வைத்து முடிவு செய்யமுடியாது. சிலருக்கு உடலுறவு கொண்டாலும் கன்னித்திரை விலகாமல் இருக்கும். அதோடு இது அறிவியல் அடிப்படையிலான சோதனை முறையில்லை எனக் WHO கூறி இருந்தது.

இதையடுத்து இராணுவத்தில் சேரும் பெண்களுக்கு இருவிரல்களை விட்டு அவர்களின் கன்னித்தன்மையை சோதனை செய்யும் முறை இந்தோனேசியாவில் முடிவுக்கு வந்துவிட்டதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். ஆனால் இராணுவத்தைத் தவிர கப்பற்படை, விமானப்படைகளில் இந்த சோதனை முறை முடிவுக்கு வந்துவிட்டதா என்பதைக் குறித்த தகவல் எதுவும் இல்லை.

More News

6 வயதில் உடலுறவு, மனைவி திருட்டு விழா… உலகின் 10 விசித்திரமான பாலியல் பழக்கங்கள்!

“ஒருவனுக்கு ஒருத்தி“ என்ற பாலியல் நடைமுறையே தற்போது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

மயக்க மருந்து கொடுத்து இரு ஆண்களுடன் ஆபாசப்படம்: பிரபல நடிகையின் மீது மாடல் நடிகை புகார்!

தனக்கு மயக்க மருந்து கொடுத்து இரு ஆண்களுடன் இணைந்து ஆபாச படம் எடுத்ததாக பிரபல் நடிகை ஒருவர் மீது மாடல் அழகி ஒருவர் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுக ஆட்சி காரணமாக 'பீஸ்ட்' டைட்டில் மாறுகிறதா?

திமுக ஆட்சியில் காரணமாக தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' படத்தின் டைட்டில் மாற இருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தனுஷ் - செல்வராகவன் படப்பிடிப்புக்கு மறுப்பு தெரிவித்தாரா தாணு?

தனுஷ் மற்றும் செல்வராகவன் ஆகிய இருவரும் படப்பிடிப்புக்கு தயாராக இருந்த நிலையில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் படப்பிடிப்பு வேண்டாம் என மறுத்ததாக பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பெரும்

பா ரஞ்சித்தின் அடுத்த படத்தில் சீயான் விக்ரம்?

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'சார்பாட்டா பரம்பரை' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் வெற்றியை இன்னும்