மோடி மோசடியால் விராத் கோஹ்லி பதவிக்கு ஆபத்தா?

  • IndiaGlitz, [Saturday,February 24 2018]

பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11500 கோடி கடன் பெற்று வெளிநாட்டுக்கு தப்பியோடிய நிலையில் அந்த வங்கியின் நிலை ஆட்டம் கண்டுள்ளது. பங்கு மார்க்கெட்டில் பிஎன்பி வங்கியின் பங்குகள் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் இந்த வங்கியின் பல ஊழியர்கள் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் விளம்பரத்தூதராக இருந்து வரும் விராத் கோலி தனது பதவியை விட்டு விலகவிருப்பதாகவும், அவர் பிஎன்பி வங்கியின் விளம்பரத்தூதர் பதவிக்கான ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டதாகவும் கூறப்பட்டது.

ஆனால் இந்த தகவலை பிஎன்பி வங்கி நிர்வாகம் மறுத்துள்ளது. இதுகுறித்து கூறிய அந்த வங்கி நிர்வாகிகள், பிஎன்பி வங்கியின் விளம்பரத்தூதராக விராத் கோலி தொடர்ந்து செயல்படுவார் என தெரிவித்துள்ளனர். ஏற்கனவே நீரவ் மோடியின் வைரநகை கடைகளுக்கு விளம்பர தூதராக இருந்த நடிகை பிரியங்கா சோப்ரா, அந்த பதவியில் இருந்து விலக சட்டபூர்வமான நடவடிக்கை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தை இயக்கும் தேசிய விருது பட இயக்குனர்

கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்த தேசிய விருது பெற்ற திரைப்படமான 'வெயில்' படத்தை இயக்கிய இயக்குனர் வசந்தபாலன், ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கியூப் நிறுவனத்துடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: அதிரடி முடிவெடித்த தயாரிப்பாளர் சங்கம்

தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் கியூப் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தை இன்று பெங்களூரில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் டிடிஎஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும்

ரஜினியின் '2.0' படம் எப்பதான் ரிலீஸ் ஆகும்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கிய பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் '2.0' திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி திருநாளில் வெளியாகும் என்று முதலில் கூறப்பட்டது.

தனுஷை முதன்முதலாக பதற வைக்கும் நடிகை

தனுஷ் நடித்து வரும் 'மாரி 2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் சாய்பல்லவி மற்றும் முக்கிய கேரக்டரில் வரலட்சுமி சரத்குமார் நடித்து வருகின்றனர்.

விசுவாசம் படத்தில் அஜித்தின் கேரக்டர் என்ன தெரியுமா?

அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கவுள்ள 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது என்பதும் இந்த படத்திற்காக பின்னி மில்லில் பிரமாண்டமான செட் தயாராகி வருகிறது