விராத்-அனுஷ்கா வாழும் வீட்டின் வாடகை எவ்வளவு தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,March 14 2018]

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் தேதி இத்தாலியில் நடைபெற்ற விராத் கோஹ்லி, அனுஷ்காவின் திருமணம், இந்திய நட்சத்திரங்களின் மிகச்சிறந்த திருமணங்களில் ஒன்று. இந்த திருமணம் இருவீட்டார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் மட்டுமே நடந்திருந்தாலும் டெல்லி மற்றும் மும்பையில் பிரமாண்டமான வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது

இந்த நிலையில் விராத்-அனுஷ்கா தம்பதியினர் குடியிருக்க போகும் பிரமாண்டமான வீடு பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளது. மும்பையின் முக்கிய பகுதிகளில் ஒன்றான வோர்லி என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 40வது மாடியில் உள்ள ஒரு பிளாட்டில் தான் இந்த காதல் தம்பதியினர் தங்கவுள்ளனர். இந்த  வீட்டின் வாடகை மட்டும் மாதம் ஒன்றுக்கு ரூ.15 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. 2675 சதுர அடி கொண்ட இந்த இந்த பிளாட்டிற்கு அட்வான்ஸ் ரூ.1.50 கோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இந்த வீடு தற்காலிகமானது. இதே பகுதியில் விராத் கோஹ்லி ரூ.34 கோடிக்கு புதிய வீடு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார். 35வது மாடியில் உள்ள இந்த வீடு 7171 சதுர அடியில் கடற்கரை அழகை ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த வீட்டின் அலங்கார பணிகள் நடந்து கொண்டிருப்பதால் அந்த பணிகள் முடியும்வரை விராத்-அனுஷ்கா தம்பதியினர் வாடகைக்கு இருக்க முடிவு செய்துள்ளனர். மேலும் இதே அபார்ட்மெண்டின் 29வது மாடியில் யுவராஜ் சிங் தனது மனைவியுடன் தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

 

More News

சூர்யாவின் 'NGK' டீசர் எப்போது? தயாரிப்பாளர் தகவல்

நடிகர் சூர்யா நடித்து வரும் 'NGK' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. செல்வராகவன் இயக்கி வரும் இந்த படத்தில் ரகுல்ப்ரித்திசிங் மற்றும் சாய்பல்லவி நடித்து வருகின்றனர்.

ரஜினியிடம் ஆட்டோகிராப் வாங்கிய தாசில்தாரின் அதிரடி முடிவு

ரஜினிகாந்த் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதை பல நிகழ்ச்சிகள் நிரூபித்த நிலையில் தற்போது அவர் ஆன்மீகப்பயணமாக சென்றுள்ள இமயமலை பகுதிகளிலும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.

ஸ்டீபன் தந்த ஞானதானம்: கமல் பெருமிதம்

இங்கிலாந்து நாட்டு இயற்பியல் விஞ்ஞானியும் சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருந்த கடவுளின் துகள் என்று போற்றப்பட்டவருமான ஸ்டீபன் ஹாக்கிங் இன்று காலமானார்.

ரஜினியின் பகுதி நேர அரசியல் குறித்து அமைச்சர் ஜெயகுமார் கிண்டல்

அரசியல் குறித்த கேள்விகளுக்கும் மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகள் குறித்த கேள்விகளுக்கும் ரஜினிகாந்த் பதில் அளிப்பதில்லை என்ற விமர்சனங்கள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது.

விஜய்யுடன் நடித்தால் தான் பெரிய நடிகையா? ஆதங்கத்தில் ஆண்ட்ரியா

நடிகை ஆண்ட்ரியா சமீபத்தில் கல்லூரி விழா ஒன்றில் பேசும்போது திரையுலகம் ஆணாதிக்கத்தில் இருப்பதாகவும், பெரிய நடிகர்களுடன் நடிக்கும் நடிகைகளுக்கே வாய்ப்புகள் அதிகம் கிடைப்பதாகவும்,