பிரபல குணசித்திர நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார்

  • IndiaGlitz, [Thursday,April 27 2017]


இன்று இந்திய திரையுலகிற்கு போதாத நாள் போலும். இன்று காலை பழம்பெரும் பாலிவுட் நடிகர் வினோத்கண்ணா மரணம் அடைந்ததை அடுத்து சற்று முன்னர் பிரபல வில்லன் மற்றும் குணசித்திர நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார். அவருக்கு வயது 74

கடந்த மூன்று ஆண்டுகளாக உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வந்த வினுசக்கரவர்த்தி சிகிச்சையின் பலனின்றி இன்று இரவு 7 மணிக்கு காலமானார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்பட பல மொழிகளில் சுமார் 1000 படங்களுக்கு மேல் நடித்தவர். நடிகர் மட்டுமின்றி திரைக்கதை ஆசிரியராகவும் ஒருசில படங்களில் பணியாற்றியுள்ளார். அதேபோல் படங்கள் இயக்கிய அனுபவமும் உண்டு. தமிழ் திரையுலகில் கவர்ச்சிக்கன்னியாக வலம் வந்த சில்க் ஸ்மிதாவை அறிமுகம் செய்தவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ராசியான நடிகர் இவர் என்பதும், ரஜினியுடன் இவர் நடித்த சுமார் 25 படங்களும் சூப்பர் ஹிட் எனபதும் குறிப்பிடத்தக்கது.

வினு சக்கரவர்த்திக்கு கர்ணப்பூ என்ற மனைவியும் சரவணன் என்ற மகனும், சண்முகப்பிரியா என்ற மகளும் உள்ளனர்.

More News

பிரபல பாடலாசிரியர் இயக்கும் முதல் படத்தில் பிரசன்னா

தனுஷ் நடித்த 'மரியான்' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான 'நெஞ்சே எழு' என்ற பாடலை யாரும் மறந்திருக்க முடியாது. இந்த அற்புதமான பாடலை எழுதியவர் கவிஞர் குட்டிரேவதி. இவர் தற்போது இயக்குனராகி ஒரு படத்தை இயக்கவுள்ளார். சமீபத்தில் தனுஷின் ப.பாண்டி படத்தில் ராகவன் என்ற கேரக்டரில் நடித்து அனைவரின் பாராட்டை பெற்ற பிரசன்னா தான், குட்ட&

நண்பர் வினோத்கண்ணா குடும்பத்திற்கு ரஜினிகாந்த் இரங்கல்

பழம்பெரும் பாலிவுட் நடிகர் வினோத் கண்ணா இன்று புற்றுநோய் காரணமாக மரணம் அடைந்தார் என்பதை பார்த்தோம். அவருடைய மறைவு பாலிவுட்டை மட்டுமின்றி இந்திய திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது...

வினோத்கண்ணா மறைவால் பாகுபலி 2' பட ரிலீஸில் மாற்றம்?

பழம்பெரும் பாலிவுட் நடிகரும் பாஜக எம்பியுமான வினோத்கண்ணா இன்று காலமானார். அவருடைய மறைவு பாலிவுட் திரையுலகினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது...

மே-1, அஜித் பிறந்த நாளில் 'விவேகம்' படக்குழுவினர்களின் விருந்து

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் முடிந்துவிடும் நிலையில் உள்ளது. இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் நடந்து வருகிறது...

துப்புரவு பணியாளர்களுக்கு 'பாகுபலி 2' பட டிக்கெட்டுக்களை கொடுத்த கலெக்டர்

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் வெளிநாடுகளில் இந்த படத்தின் முதல் காட்சி தொடங்கவுள்ள நிலையில் கட்டப்பா ரகசியம் வெகுவிரைவில் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...