அஞ்சலி செலுத்த முடியாத நிலையில் உள்ளேன்: சீயான் விக்ரம் வருத்தம்

  • IndiaGlitz, [Wednesday,August 08 2018]

திமுக தலைவர் கருணாநிதியின் திடீர் மறைவால் தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி திரையுலகினர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அன்னாருக்கு இறுதி மரியாதை செய்யும் வகையில் சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் இன்று மாலை நடைபெறும் இறுதி ஊர்வலத்திலும் பெரும்பாலான திரை நட்சத்திரங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது வெளியூரில் இருப்பதால் தன்னால் மறைந்த தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலையில் இருப்பதாக சீயான் விக்ரம் தன்னுடைய இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:

தமிழின தலைவர், முத்தமிழ் அறிஞர், இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர், ஐந்து முறை தமிழக முதல்வர் என பன்முக ஆளூமை கொண்ட டாக்டர் கலைஞர் ஐயா அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன்

தற்போது வெளியூரில் இருப்பதால் நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியாத சூழலில் இருக்கின்றேன். அவருடைய பிரிவால் வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், கோடிக்கணக்கான தமிழர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்' என்று விக்ரம் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

More News

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய விஜய் மனைவி

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவை அடுத்து அவரது உடலுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா உள்பட பல திரையுலக பிரமுகர்கள் நேரில் இன்று காலை முதல் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த முடியவில்லையே! ஷங்கர் வருத்தம்

கருணாநிதிக்கு இன்று அதிகாலை முதல் திரையுலகினர்கள் பலர் தங்களுடைய அஞ்சலியை செலுத்தி வரும் நிலையில் ஒருசிலர் வெளிநாடுகளில் இருப்பதால் அவருக்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலையில் உள்ளனர்

கருணாநிதி இறுதி ஊர்வலம் புறப்படும் நேரம் அறிவிப்பு

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் சென்னை ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் லட்சக்கணக்கான தொண்டர்கள் அவருக்கு இறுதியஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கருணாநிதிக்கு மெரினாவில் இடம்: தமிழக அரசு மேல்முறையீடா?

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய சென்னை மெரீனாவில் இடம் ஒதுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் இன்று காலை உத்தரவிட்டதை அடுத்து

கருணாநிதிக்கு பிக்பாஸ் போட்டியாளர்கள் இரங்கல்

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு செய்தி குறித்து பிக்பாஸ் இல்லத்தில் இருக்கும் போட்டியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.