வீட்டில் பணியாற்றும் ஊழியரின் திருமணத்திற்கு விக்ரம் செய்த செலவு இத்தனை லட்சங்களா?

  • IndiaGlitz, [Thursday,September 15 2022]

பொதுவாக திரையுலக நட்சத்திரங்கள் தங்கள் வீட்டில் பணிபுரியும் ஊழியர்களின் இல்லத் திருமணத்திற்கு வருவது இல்லை. அப்படியே வந்தாலும் பேருக்கு தலைகாட்டி விட்டு சென்று விடுவார்கள். ஆனால் விக்ரம் வீட்டில் கடந்த 40 ஆண்டுகளாக வேலை செய்த மேரி என்ற பெண்ணின் மகன் திருமணத்திற்கு விக்ரம் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்ததோடு பல லட்சம் செலவு செய்ததாக கூறப்படுகிறது.

நடிகர் விக்ரம் வீட்டில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்து வருபவர் மேரி. இவருடைய கணவரும் விக்ரம் வீட்டில் வேலை செய்த பின்னர் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மேரியின் மகன் தீபக் என்பவருக்கும் வர்ஷினி என்பவருக்கும் திருப்போரூர் கந்தசாமி ஆலயத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்திற்கு நடிகர் விக்ரம் நேரில் சென்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதுமட்டுமின்றி மாப்பிள்ளை வீட்டாரின் அனைத்து செலவுகளையும் விக்ரம் ஏற்றுக் கொண்டார் என்று கூறப்படுகிறது. இந்த செலவு மட்டுமே பல லட்சம் என்று கூறப்படுகிறது.

மேலும் மேரி குடும்பத்திற்கு சென்னை பெசன்ட் நகரில் சொந்த வீடு விக்ரம் வாங்கி கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து மேரியின் சகோதரர் கூறியபோது, ‘பெசன்ட் நகரில் எங்களை மாதிரி நடுத்தர வர்க்கத்தினர் வீடு வாங்குவதை நினைத்து கூட பார்க்க முடியாத நிலையில் விக்ரம் அதை செய்து கொடுத்தார். மேலும் மேரியின் இரண்டு குழந்தைகளையும் விக்ரம் தனது சொந்த செலவில் படிக்க வைத்தார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து சொந்த வீடு, திருமண செலவு உள்பட பல லட்சங்களை தன்னுடைய வீட்டில் பணிபுரியும் ஊழியருக்காக விக்ரம் செலவு செய்து உள்ளார் என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

More News

'சத்யா' சீரியல் ஆயிஷாவுக்கு திருமணமாகிவிட்டதா? போட்டோஷூட்டால் வந்த குழப்பம்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்று 'சத்யா' என்பதும் இதில் விஷ்ணு மற்றும் ஆயிஷா ஜோடியாக நடித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

வெட்கச்சிரிப்புடன் பிரபுவின் தோளில் சாய்ந்த குஷ்பு: அருகில் யார் இருக்கிறார் தெரியுமா?

கடந்த 90களில் பிரபு மற்றும் குஷ்பு இணைந்து பல திரைப்படங்களில் நடித்த நிலையில் தற்போது பிரபுவின் தோளில் குஷ்பு சாய்ந்து இருப்பது போன்ற புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு': தமிழகத்தில் அதிகாலை காட்சி மட்டும் இத்தனையா?

சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள 'வெந்து தணிந்தது காடு' இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.

இந்த நபரை சந்திக்க விரும்புகிறேன், யாராவது ஹெல்ப் பண்ணுங்களேன்: ராஷ்மிகா மந்தனா 

கடந்த ஆண்டு வெளியான 'புஷ்பா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் பாடல் ஒன்றுக்கு பள்ளி சிறுமி ஒருவர் செம டான்ஸ் ஆடி உள்ள நிலையில்

ஒரே நேரத்தில் 'இந்தியன் 2' - 'ஆர்சி 15': இயக்குனர் ஷங்கரின் வேற லெவல் பிளான்!

 பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் ஒரே நேரத்தில் 'இந்தியன் 2' மற்றும் 'ஆர்சி 15' ஆகிய இரண்டு படங்களையும் மாறி மாறி வரும் நிலையில் தற்போது வேற லெவலில் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.