விக்ரம் மகன் துருவ் முதல் படம் குறித்த முக்கிய தகவல்

  • IndiaGlitz, [Friday,March 02 2018]

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய விக்ரம் தனது மகன் துருவ்வை சினிமாவில் அறிமுகம் செய்கிறார் என்பதும், அவருடைய முதல் படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்த படத்தின் டைட்டில் 'வர்மா' என்று கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டு ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியான நிலையில் இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. தெலுங்கில் சூப்பர் ஹிட்டான 'அர்ஜூன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்கான இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் நடைபெறவுள்ளது. இந்த படப்பிடிப்பில் துருவ் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்கின்றனர்.

'ஜோக்கர்' புகழ் ராஜூமுருகன் வசனம் எழுதும் இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். ராதான் இசையமைக்கும் இந்த படம் வரும் டிசம்பரில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

More News

மதுரை என்கவுண்டரின் பின்னணி என்ன? திடுக்கிடும் தகவல்

இன்று மாலை மதுரையில் இரண்டு ரவுடிகள் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டு என்கவுண்டர் செய்த சம்பவம் தமிழகத்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்த புதிய தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

உன்னையும் மண்ணையும் வென்று வா நீ! ரஜினியின் 'காலா' டீசர் விமர்சனம்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய 'காலா' படத்தின் அதிரடியாக நள்ளிரவு வெளியாகி இணையதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

3 வித்தியாசமான கோணத்தில் இலங்கை போர் பற்றிய தமிழ்ப்படம்

இலங்கையில் ஒரு பகுதியான 'யாழ்' என்ற பெயரில் ஒரு திரைப்படம் உருவாகியுள்ளது. இலங்கையில் போர் நடக்கும் போது ஆறு முக்கிய கதாபாத்திரங்களுக்குள் "என்ன நடக்கின்றது என்பதே இந்த படத்தின் கதை.

தாயின் கள்ளக்காதலால் பரிதாபமாக பலியான பத்து வயது சிறுவன்

தாய் கள்ளக்காதலில் ஈடுபட்டதால் அவருடைய 10 வயது மகன் கொடூரமாக கள்ளக்காதலனால் கொலை செய்யபப்ட்ட சம்பவம் சென்னை நகரையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தக்காளி விலை: விவசாயிகளின் கண்களை போல் சிவந்த ஏரி

தக்காளியின் விலை கடந்த சில மாதங்களுக்கு முன் கிலோ ரூ.100க்கு விற்பனையாகியது. இதனால் பொதுமக்கள் திண்டாடினாலும், தக்காளி விவசாயிகள் நல்ல லாபம் அடைந்தனர்.