close
Choose your channels

விக்ரம் பிரபு தயாரிக்கும் முதல் படத்தில் 'கபாலி'யின் கனெக்ஷன்

Wednesday, July 6, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமாரின் மகன் துஷ்யந்த் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன் மூலம் 'மீன் குழம்பும் மண் பானையும்' என்ற படத்தை தயாரித்துள்ளார். உலக நாயகன் கமல்ஹாசன் கெளரவ வேடத்தில் நடித்துள்ள இந்த படம் விரைவில் வெளிவரவுள்ளது.
இந்நிலையில் பிரபுவின் மகனும் பிரபல நடிகருமான விக்ரம் குமாரும் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்திற்கு 'கபாலி' ரஜினியின் உலகப்புகழ் வசனமான 'நெருப்புடா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தின் பூஜையில் ஏ.வி.எம்.சரவணன், ராம்குமார்,பிரபு, விக்ரம்பிரபு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த படத்தில் விக்ரம்பிரபு நாயகனாகவும், நிக்கி கல்ராணி நாயகியாகவும் நடிக்கின்றனர். சீன் ரோல்டான் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஆவார். மேலும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment