விக்ரம் பிரபு தயாரிக்கும் முதல் படத்தில் 'கபாலி'யின் கனெக்ஷன்

  • IndiaGlitz, [Wednesday,July 06 2016]

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமாரின் மகன் துஷ்யந்த் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன் மூலம் 'மீன் குழம்பும் மண் பானையும்' என்ற படத்தை தயாரித்துள்ளார். உலக நாயகன் கமல்ஹாசன் கெளரவ வேடத்தில் நடித்துள்ள இந்த படம் விரைவில் வெளிவரவுள்ளது.
இந்நிலையில் பிரபுவின் மகனும் பிரபல நடிகருமான விக்ரம் குமாரும் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்திற்கு 'கபாலி' ரஜினியின் உலகப்புகழ் வசனமான 'நெருப்புடா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தின் பூஜையில் ஏ.வி.எம்.சரவணன், ராம்குமார்,பிரபு, விக்ரம்பிரபு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த படத்தில் விக்ரம்பிரபு நாயகனாகவும், நிக்கி கல்ராணி நாயகியாகவும் நடிக்கின்றனர். சீன் ரோல்டான் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஆவார். மேலும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.