close
Choose your channels

இன்று ஒரே நாளில் நயன்தாராவின் 2 படங்களின் பூஜை

Wednesday, December 16, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

2015ஆம் ஆண்டு நயன்தாராவின் பொற்காலம் என்றே கூறலாம். அவர் நடித்த 'தனி ஒருவன்', 'மாயா', 'நானும் ரெளடிதான்' என மூன்று படங்களும் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது. 'நண்பேண்டா', 'மாஸ்' ஆகிய படங்களும் ஓரளவு சுமாரான வெற்றியை பெற்றது. மேலும் நயன்தாரா தற்போது ஜீவாவுடன் 'திருநாள்' மற்றும் கார்த்தியுடன் 'காஷ்மோரா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்து முடித்துள்ள 'இது நம்ம ஆளு' திரைப்படமும் விரைவில் வெளிவரவுள்ளது.


இந்நிலையில் இன்று ஒரே நாளில் நயன்தாரா நடிக்கும் இரண்டு படங்களின் பூஜை போடப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்று விக்ரம் ஜோடியாக முதல்முதலாக நயன்தாரா நடிக்கும் படம். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தை அரிமா நம்பி' இயக்குனர் ஆனந்த சங்கர் இயக்க, 'புலி' தயாரிப்பாளர் ஷிபுதமீன் தயாரிக்கின்றார்.

மேலும் வெங்கடேஷுடன் நயன்தாரா நடிக்கும் தெலுங்கு படம் ஒன்றின் பூஜையும் இன்று நடைபெற்றது. மாருதி இயக்கவுள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார். இன்று பூஜை போடப்பட்டதை தொடர்ந்து நாளை முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment