இன்று ஒரே நாளில் நயன்தாராவின் 2 படங்களின் பூஜை

  • IndiaGlitz, [Wednesday,December 16 2015]

2015ஆம் ஆண்டு நயன்தாராவின் பொற்காலம் என்றே கூறலாம். அவர் நடித்த 'தனி ஒருவன்', 'மாயா', 'நானும் ரெளடிதான்' என மூன்று படங்களும் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது. 'நண்பேண்டா', 'மாஸ்' ஆகிய படங்களும் ஓரளவு சுமாரான வெற்றியை பெற்றது. மேலும் நயன்தாரா தற்போது ஜீவாவுடன் 'திருநாள்' மற்றும் கார்த்தியுடன் 'காஷ்மோரா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்து முடித்துள்ள 'இது நம்ம ஆளு' திரைப்படமும் விரைவில் வெளிவரவுள்ளது.


இந்நிலையில் இன்று ஒரே நாளில் நயன்தாரா நடிக்கும் இரண்டு படங்களின் பூஜை போடப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்று விக்ரம் ஜோடியாக முதல்முதலாக நயன்தாரா நடிக்கும் படம். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தை அரிமா நம்பி' இயக்குனர் ஆனந்த சங்கர் இயக்க, 'புலி' தயாரிப்பாளர் ஷிபுதமீன் தயாரிக்கின்றார்.

மேலும் வெங்கடேஷுடன் நயன்தாரா நடிக்கும் தெலுங்கு படம் ஒன்றின் பூஜையும் இன்று நடைபெற்றது. மாருதி இயக்கவுள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார். இன்று பூஜை போடப்பட்டதை தொடர்ந்து நாளை முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என கூறப்படுகிறது.

More News

'அஞ்சல' படத்திற்காக 'டீ' போடும் சினிமா பிரபலங்கள்

விமல், நந்திதா நடிப்பில் தங்கம் சரவணன் இயக்கியுள்ள 'அஞ்சல' படம் வரும் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகவுள்ளது..

விஜய் பட வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபு

கடந்த 1992ஆம் ஆண்டு ரஜினிகாந்த், விஜயசாந்தி, குஷ்பு, பண்டரிபாய் நடித்த 'மன்னன்' திரைப்படத்தை பி.வாசு இயக்கியிருந்தார்....

நான் ஓடி ஒளியற ஆள் இல்லை - 'பீப் பாடல்' நடவடிக்கை குறித்து சிம்பு

சிம்பு-அனிருத் இணைந்து தயாரித்த 'பீப் பாடல்' குறித்த சர்ச்சைகள் நாளுக்கு நாள் நீண்டுகொண்டே இருக்கும் நிலையில்...

இன்று முதல் 'எந்திரன் 2' படப்பிடிப்பு ஆரம்பம். ஷங்கரின் அதிகாரபூர்வ அறிவிப்பு

பாகுபலி' ரிலீசுக்கு முன்புவரை தென்னிந்தியாவின் அதிக வசூல் பெற்ற படம் என்ற புகழை பெற்றிருந்த 'எந்திரன்'...

இந்த வெள்ளம் நமக்கு கற்று கொடுத்த பாடம் என்ன? இளையராஜா

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு வெள்ள நிவாரணம்...