விக்ரமின் இருமுகன் - கருடா படங்களின் முக்கிய தகவல்கள்

  • IndiaGlitz, [Monday,March 14 2016]

அரிமா நம்பி' இயக்குனர் ஆனந்த்சங்கர் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து வரும் 'இருமுகன்' படத்தின் படப்ப்பிடிப்பு ஏற்கனவே சென்னை மற்றும் மலேசியாவில் நடைபெற்று முடிந்துவிட்ட நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு மார்ச் 20 முதல் தொடங்கவுள்ளதாக வந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம். இந்த படப்ப்பிடிப்பை அடுத்து லடாக் மற்றும் பாங்காக் ஆகிய பகுதிகளிலும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.


உளவு அதிகாரி மற்றும் திருநங்கை என இரண்டு வித்தியாசமான வேடங்களில் விக்ரம் நடிக்கும் இந்த படத்தில் நயன்தாரா, நித்யாமேனன், நாசர், தம்பிராமையா, யூகிசேது உள்பட பலர் நடித்துவருகின்றனர். இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். இந்த படம் வரும் ஜூலையில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் ஏப்ரல் முதல் வாரம் முதல் 'சமர், நான் சிகப்பு மனிதன் உள்பட பல படங்களை இயக்கிய இயக்குனர் திரு இயக்கவுள்ள 'கருடா' படப்பிடிப்பில் விக்ரம் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. எனவே விக்ரம் இரண்டு படங்களிலும் மாறி மாறி நடிப்பார் என தெரிகிறது. 'கருடா' படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.