'விக்ரம் 58' படத்தின் டைட்டில் குறித்த தகவல்!

  • IndiaGlitz, [Tuesday,December 24 2019]

விக்ரம் நடிப்பில் ‘டிமாண்டி காலனி’, ’இமைக்காநொடிகள்’ போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் ’விக்ரம் 58’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் ’அமர்’ என்று சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவியது. ஆனால் இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவலுக்கு படக்குழுவினர் மறுப்பு தெரிவித்தனர். வரும் ஜனவரியில் அதிகாரபூர்வமாக டைட்டில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இந்த படத்திற்கு ‘கோப்ரா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தற்போது ஒரு செய்தி பரவி வருகிறது. இந்த டைட்டில் குறித்த அறிவிப்பு புத்தாண்டில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம் ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கும் இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரும் ஒரு கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விக்ரம் பல்வேறு தோற்றங்களில் நடித்து வருவதால் மேக்கப்பிற்கு என தனியாக டீம் ஒன்று இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 2020ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படம் தவிர மணிரத்னம் இயக்கி வரும் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பிலும் விக்ரம் விரைவில் கலந்து கொள்ளவுள்ளார்.

More News

மீண்டும் தனுஷ் படத்தில் அனிருத்: அட்டகாசமான அறிவிப்பு!

தனுஷ் நடிப்பில் அனிருத் இசையில் உருவான '3', 'வேலையில்லா பட்டதாரி' மற்றும் 'மாரி' ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் என்பது அனைவரும் தெரிந்ததே.

சூர்யாவின் 'சூரரை போற்று' படம் குறித்த சூப்பரான தகவல்

கடந்த சில நாட்களாக சூர்யாவின் அடுத்த படம் குறித்த அறிவிப்புகள் வெளிவந்து டுவிட்டர் மற்றும் பேஸ்புக் சமூக வலை தளங்களை டிரெண்டாக்கி வருகின்றன என்பது தெரிந்ததே.

'அருவி' அதிதிபாலனா இது? ஆச்சரிய அதிர்ச்சியில் ரசிகர்கள்

கடந்த 2017ஆம் ஆண்டு அருண் பிரபு இயக்கத்தில் உருவான 'அருவி' என்ற திரைப்படத்தில் நடித்த அதிதிபாலனுக்கு வாழ்த்துக்கள் குவிந்தது என்பது தெரிந்ததே. எய்ட்ஸ் நோயாளியாகவும்

17 வயது இளம்பெண் மரணத்தில் துப்பு: ஒரே நேரத்தில் இருவரை காதலித்தது அம்பலம்

வேலூரை அடுத்த அரியூர்க்குப்பம் என்ற பகுதியைச் சேர்ந்த நிவேதா என்ற 17 வயது இளம்பெண் ஒருவர் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து கொண்டிருந்த நிலையில் திடீரென

மனைவியுடன் ஒரு மணி நேரம் போனில் பேசிய கணவன் தூக்கில் தொங்கி தற்கொலை!

அகமதாபாத் சென்ற மனைவியுடன் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் போனில் பேசிய கணவர் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தை