சென்னை, மலேசியாவை அடுத்து காஷ்மீர் செல்லும் விக்ரம் குழுவினர்

  • IndiaGlitz, [Wednesday,March 02 2016]

முதல்முறையாக விக்ரம் இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் 'இருமுகன்' படத்தின் சென்னை மற்றும் மலேசியா படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.


இன்னும் இரண்டரை மாதங்கள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெறவேண்டியதிருப்பதாகவும், மீதி படப்பிடிப்பை விறுவிறுப்பாக முடித்துவிட்டு இந்த படத்தை வரும் ரம்ஜான் திருநாளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரகசிய போலீஸ் அதிகாரி மற்றும் திருநங்கை என இரண்டு வேடங்களில் விக்ரம் நடித்து வரும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் நித்யாமேனன் நடித்து வருகின்றனர். மேலும் நாசர், தம்பிராமையா, யூகிசேது ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்தை 'அரிமாநம்பி' இயக்குனர் ஆனந்த்சங்கர் இயக்கி வருகிறார்.

விஜய் நடித்த 'புலி' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷிபுதமீன்ஸ் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கின்றார்.