விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு?'

  • IndiaGlitz, [Thursday,December 31 2015]

10 எண்றதுக்குள்ள' படத்தை அடுத்து விக்ரம் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார். 'அரிமாநம்பி' இயக்குனர் ஆனந்த் சங்கர் மற்றும் இயக்குனர் திரு ஆகியோர்கள் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ளார்.


இந்நிலையில் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா நடிக்கவுள்ள படத்தின் டைட்டில் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு படக்குழுவினர் 'கருடா' என்ற டைட்டிலை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர் ஷிபுதமீன் விஜய்யின் 'புலி' படத்திற்காக இந்த டைட்டிலை பதிவு செய்து வைத்திருந்த்தாகவும், தற்போது இந்த டைட்டில் இந்த படத்தின் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் இந்த டைட்டிலை பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் இன்னொரு முக்கிய வேடத்தில் நித்யாமேனன் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராகவும், ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவாளராகவும் பணிபுரியவுள்ளனர். வரும் 10ஆம் தேதி முதல் தொடங்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் மலேசியாவில் நடைபெறவுள்ளது.

More News

19 பாடகர்கள் பாடிய சென்னை பாடல். விஷால் வெளியிட்டார்

இம்மாத தொடக்கத்தில் சென்னையில் பெய்த கனமழை மற்றும் அதனையடுத்து ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக சென்னையே தத்தளித்தது....

ஜெயம் ரவிக்கு வாழ்த்து தெரிவித்த ஹாலிவுட் கலைஞர்

2015ஆம் ஆண்டின் வெற்றி நாயகன் ஜெயம் ரவி நடித்த 'பூலோகம்' திரைப்படம் கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில்...

சூர்யாவை அடுத்து தனுஷின் நன்றி செய்தி

சூர்யா தயாரித்த இரண்டு படங்களின் வெற்றிக்கு கடிதம் மூலம் நன்றி தெரிவித்த செய்தியை சற்று முன் பார்த்தோம். இந்நிலையில் சூர்யாவை...

மாதவனின் 'இறுதிச்சுற்று' சென்சார் விபரங்கள்

மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள 'இறுதிச்சுற்று' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

லிங்குசாமிக்கு 2வது முறையாக கைகொடுத்த பென் மூவீஸ்

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த 'ரஜினிமுருகன்' திரைப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் லிங்குசாமி தயாரித்திருந்தார்...