ஜார்ஜியாவில் விஜய்சேதுபதி: 2300 கலைஞர்களுடன் படப்பிடிப்பு

  • IndiaGlitz, [Thursday,October 11 2018]

விஜய்சேதுபதி நடித்த '96' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில் தற்போது அவர் சிரஞ்சிவி நடித்து வரும் 'சயீரா நரசிம்ம ரெட்டி' படப்பிடிப்புக்காக தயாராகி வருகிறார்

இந்த படத்தின் போர்க்காட்சி ஒன்று ஜார்ஜியாவில் நடைபெறவுள்ளது. இந்த படப்பிடிப்பில் விஜய்சேதுபதி மற்றும் சுதீப் கலந்து கொள்ளவுள்ளனர். சயீரா நரசிம்ம ரெட்டியின் படைக்கும் கிழக்கு இந்திய கம்பெனியின் படைக்கும் இடையே நடைபெறும் போர்க்காட்சியில் சுமார் 2300 துணை நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் பணிபுரியவுள்ளனர். இந்த போர்க்காட்சியை ஸ்பைடர் கேமிராக்கள் உள்பட பல கேமிராக்கள் மூலம் படமாக்கப்படவுள்ளது.

சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், நயன்தாரா, விஜய்சேதுபதி, சுதீப், ஜெகபதி பாபு, தமன்னா, நாசர், பிரகாஷ்ராஜ், உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் ராம்சரண் தேஜா தயாரித்து வருகிறார். அமித் த்ரிவேதி இசாஇயில் ரத்னவேல் ஒளிப்பாதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் தயாராகி வருகிறது.

 

More News

சுவிட்சர்லாந்தில் நடந்தது என்ன? சின்மயி கூறும் திடுக் தகவல்

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின்போது வைரமுத்துவின் அறைக்கு செல்லுமாறு தான் நிகழ்ச்சி ஏற்பாட்டார்களால் வற்புறுத்தப்பட்டதாகவும்,

மாஸ் நடிகர்களின் மெளனம் ஏன்? சின்மயி விவகாரம் குறித்து தமிழிசை கேள்வி

அரசியல்வாதி குறித்து அடிக்கடி விமர்சனம் செய்யும் திரையுலகில் உள்ள மாஸ் நடிகர்கள், வைரமுத்து விவகாரம் குறித்து மெளனமாக இருப்பது ஏன்? என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.

அஜித்துக்கு அண்ணா பல்கலை. துணைவேந்தர் பாராட்டு

ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடைபெற்ற ஆளில்லா விமான போட்டியில் அஜித் ஆலோசகராக உள்ள தக்சா குழு இரண்டாம் இடத்தை பிடித்தது என்பது அனைவரும் அறிந்ததே

சிம்புவுடன் நடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை: தனுஷ்

தனுஷ் நடித்த 'வடசென்னை' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தில் முதலில் சிம்பு நடிப்பதாகத்தான் இருந்தது.

வைரமுத்து-சின்மயி விவகாரத்தில் தலையிடும் தேசிய பெண்கள் ஆணையம்

கவியரசர் வைரமுத்து மீது பாடகி சின்மயி உள்பட ஒருசில பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் கூறி வருகின்றனர்.