விஜயகாந்தின் ஒரே ஒரு போன்கால்: அந்தமான் மீனவர்களுக்கு போய் சேர்ந்த உதவிகள்

அந்தமானில் தமிழக மீனவர்கள் ஊரடங்கு காரணமாக உணவு உள்பட அடிப்படை தேவைகள் கூட இல்லாமல் இருப்பதை அறிந்து விஜயகாந்த் அவர்களுக்கு உதவி செய்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது

தமிழகத்தின் பல பகுதிகளை சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் அந்தமானில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் நிலையில் திடீரென கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தமிழக மீனவர்கள் அந்தமானில் சிக்கித் தவித்து வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியானது

இந்த செய்தியை அறிந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், இதுகுறித்து உடனடியாக உதவி செய்ய அந்தமான் தேமுதிக செயலாளருக்கு போன் செய்யுமாறு பிரேமலதாவிடம் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து பிரேமலதா விஜயகாந்த், அந்தமான் தேமுதிக செயலாளர் உதயசந்திரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்தமானில் உள்ள தமிழக மீனவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

இதன்பின்னர் அந்தமான் தேமுதிக செயலாளர் உதயசந்திரன் உடனடியாக அங்கிருந்த தமிழக மீனவர்களை கொண்டு அவர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார். இதனால் மகிழ்ச்சி அடைந்த தமிழக மீனவர்கள், விஜயகாந்திற்கு நன்றியைத் தெரிவித்தனர்.

More News

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பொதுமக்கள் வர தடை: தமிழக அரசின் அதிரடி முடிவு

கடந்த சில நாட்களாக கோயம்பேடு மார்க்கெட்டில் சமூக விலகலை கடைபிடிக்காததால் கொரோனா தொற்று சென்னையில் மிக அதிகமாகி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மத்திய, மாநில அரசுகளை மீண்டும் பால்கனி அரசுகள் என விமர்சித்த கமல்ஹாசன்!

கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அரசை பால்கனி அரசு என விமர்சனம் செய்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு பாஜக தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன

இந்த அரசு சுத்த வேஸ்ட்: மீராமிதுன் பகீர் குற்றச்சாட்டு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சர்ச்சைக்குரிய போட்டியாளரான மீராமிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தவுடனும் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஒருமுறை கொரோனா பாதித்தவருக்கு மீண்டும் கொரோனா வருமா??? WHO என்ன சொல்கிறது???

உலகில் பல நாடுகள், கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து மீண்டுள்ளவர்கள் இயல்பான வேலைகளுக்கு திரும்பலாம் எனக் கருத்துத் தெரிவித்து வருகின்றன.

சார்ஜ் போட்டு வீடியோகால் பேசிய பெண்: மொபைல் வெடித்ததால் ஏற்பட்ட விபரீதம்

சார்ஜ் போட்டு கொண்டே மொபைல் போனில் பேசக்கூடாது என்றும், இதுபோன்று பேசினால் மொபைல் வெடித்து விபரீதம் ஏற்பட்டுள்ள பல சம்பவங்கள் நடந்துள்ளது என்று தெரிந்தும்