அண்ணன் ரஜினிக்கு எனது வாழ்த்துக்கள்: விஜயகாந்த் டுவிட்

நேற்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு திரையுலகின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவித்தார். இதனையடுத்து பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் வரை பலர் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் தமிழ் திரையுலகம் உள்பட ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ரஜினியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான கேப்டன் விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் சற்றுமுன் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து டுவிட்டில் கூறியிருப்பதாவது: இந்த ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது பெறும் அண்ணன் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு, எனது மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து கலைத்துறையில் சேவைசெய்து பல உயரிய விருதுகள் பெற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நீண்ட நாள் கனவு நிறைவேறியது: பாவாடை தாவணியில் கீர்த்தி சுரேஷ் 

பாவாடை தாவணி அணிய வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு நிறைவேறியதாக, பாவாடை தாவணியில் ஸ்டில் ஒன்றை பதிவு செய்து கீர்த்தி சுரேஷ் குறிப்பிட்டுள்ளதை அடுத்து இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது 

புல்வெளிக்கு நடுவே தமிழ் பிக்பாஸ் நடிகை.. வைரல் புகைப்படம்!

சமீபத்தில் நடைபெற்று முடிந்த பிக்பாஸ் 4 ஆவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.

விஜய் விருதுகள் விழாவில் விருதுகளை அள்ளிய 'குக் வித் கோமாளி' பிரபலங்கள்!

ஒவ்வொரு ஆண்டும் விஜய் டிவியில் விஜய் டெலிவிஷன் விருதுகள் வழங்கப்படும் என்பதும் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக இந்த விழா நடை பெறவில்லை என்பதால்

விஷாலின் அடுத்த படம் குறித்த அதிரடி அறிவிப்பு!

நடிகர் விஷால் தற்போது 'துப்பறிவாளன் 2' மற்றும் 'எனிமி' ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்புகள் இறுதிகட்டத்தில் உள்ளன

இவனுங்க எல்லாம் ஜெயிச்சுட்டு என்னத்த புடுங்குவாங்க: 'கோடியில் ஒருவன்' டிரைலர்

விஜய் ஆண்டனி ஆத்மிகா நடிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கோடியில் ஒருவன்'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் விரைவில் வெளியாக உள்ளது.