லஞ்சம் இல்லாத ஆட்சி... அஞ்சாத நீதி: விஜயகாந்த் குடியரசு தின வாழ்த்து

  • IndiaGlitz, [Saturday,January 26 2019]

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் சிகிச்சைக்காக கடந்த சில வாரங்களுக்கு முன் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். இருப்பினும் அவர் அவ்வப்போது தமிழக மக்களுக்கு தனது சமூக வலைத்தள பக்கத்தின் மூலம் செய்திகள் அறிவித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று குடியரசு தின விழாவை முன்னிட்டு விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். லஞ்சம் இல்லாத ஆட்சி, யாருக்குக்ம் அஞ்சாத நீதி, நேர்மையான தேர்தல் மூலம் மக்களோடு இணைந்து ஆட்சியை உருவாக்கி தமிழகத்தை முதன்மையான மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம், நன்றி வணக்கம்' என்று அந்த வீடியோவில் விஜயகாந்த் கூறியுள்ளார்.

விஜயகாந்த் உடல்நலம் குறித்து சமூக ஊடகங்களில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வதந்திகள் வெளியாகி வரும் நிலையில் இந்த வீடியோ அனைத்து வதந்திகளையும் தவிடுபொடியாக்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது