விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு.. மருத்துவமனை விரையும் திரையுலக பிரபலங்கள்..!

  • IndiaGlitz, [Saturday,December 02 2023]

தேமுதிக தலைவர் மற்றும் நடிகர் விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் திரையுலக பிரபலங்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று விஜயகாந்த் உடல்நிலை குறித்து நலம் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன

சமீபத்தில் விஜயகாந்தின் உடல்நிலை பாதிப்படைந்ததை அடுத்து அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு இருந்தது. விஜயகாந்தின் உடல்நிலை பாதிப்பு மூன்றாவது கட்டத்தில் இருப்பதாகவும் அவருக்கு மீண்டும் தீவிர சிகிச்சை தேவை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவருக்கு நுரையீரல் பிரச்சனை இருப்பதால் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியானதை அடுத்து நடிகர் சங்க தலைவர் நாசர்,பெப்சி தலைவர் ஆர் கே செல்வமணி உள்ளிட்டோர் விஜயகாந்தை நேரில் சென்று நலம் விசாரித்து வருகின்றனர்.

தற்போது விஜயகாந்த் அவர்களால் பேச முடியாத நிலை இருப்பதால் விஜயகாந்தின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்களிடம் அவர்கள் உடல்நிலை கேட்டு அறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.

More News

பிக்பாஸ் வீட்டில் இந்த வார எவிக்சன் யார்? எதிர்பார்த்த அதே போட்டியாளர் தான்..!

பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர் எலிமினேஷன் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த  வாரம் வெளியேறும் போட்டியாளர் யார் என்பது குறித்த ஆர்வம் பார்வையாளர்கள் மத்தியில் இருந்தது

சில்க் ஸ்மிதா கேரக்டரில் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' நாயகி..

கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த சில திரைப்படங்கள் ஏற்கனவே வந்துள்ள நிலையில் தற்போது 'சில்க் ஸ்மிதா' என்ற பெயரிலேயே இன்னொரு திரைப்படம் உருவாகி வருகிறது.

இனிமே எல்லாமே எனக்கு நல்ல நேரம் தான்: வைபவ் நடித்த 'ஆலம்பனா' டிரைலர்..!

வைபவ் நடித்த 'ஆலம்பனா' என்ற திரைப்படம் வரும் 15ஆம் தேதி திரையில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

திருமண உறவில் இருந்து விலகுகிறேன்.. கணவரை டேக் செய்து திடீர் அறிவிப்பு வெளியிட்ட நடிகை..!

 திருமண உறவில் இருந்து விலகுகிறேன் என தமிழ் நடிகை ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கார்த்தி மட்டும் இதை செய்தால் நான் சினிமாவை விட்டே போகிறேன்: கஞ்சா கருப்பு..!

கார்த்தி மட்டும் 'பருத்திவீரன்' போன்ற இன்னொரு படத்தில் நடித்து விட்டால் நான் சினிமாவில் விட்டே போகிறேன் என்று நடிகர் கஞ்சா கருப்பு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது