விஜயகாந்த், பிரேமலதா டிஸ்சார்ஜ் எப்போது? மருத்துவமனையின் அறிக்கை! 

நடிகரும் தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் மற்றும் அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகிய இருவரும் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இவர்கள் இருவரும் குணமாகி வருவதாகவும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அவர்களுடைய உடல்நிலை குறித்தும் டிஸ்சார்ஜ் செய்யப்படுவது குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தேமுதிக நிறுவன தலைவர் மற்றும் கழக பொதுச் செயலாளருமான திரு விஜயகாந்த் மற்றும் தேமுதிக பொருளாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இருவருக்கும் covid-19 தொற்று உறுதி செய்யப்பட்டது.

இருவரும் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ குழுவினரால் தொடர் மதிப்பீடு செய்யப்பட்டு கண்காணிப்பில் இருந்தனர். இருவரும் சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்ததால் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் ஆகிய இருவரும் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவதை அடுத்து தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

More News

ரஜினியின் முயற்சிக்கு துணையாக இருப்போம்: பிரபல அரசியல்வாதி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 2017ம் ஆண்டு தான் அரசியலில் குதிக்க இருப்பதாகவும் புதிய அரசியல் கட்சி ஆரம்பித்து வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில்

ஆர்ஜே அர்ச்சனாவுக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா?

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இன்னும் இரண்டு நாட்களில் தொடங்க உள்ளது என்பது தெரிந்ததே

ஒரு பைசா கூட காசு வாங்காமல் 75 ஆண்டுகளாக கல்வி கற்றுக்கொடுக்கும் முதியவர்!!!

பணமே வாங்காமல் தனது சொந்த கிராம மக்களுக்காக ஒடிசாவில் முதியவர் ஒருவர் 75 ஆண்டுகளாக,

சென்னையில் கொரோனா தனிமையில் இருந்தவரின் வீட்டில் 250 சரவன் தங்கம் கொள்ளை!!!

சென்னையில் திநகர் அடுத்த பாண்டிபஜார் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் நூருல் ஹக்(71).

ஹரிஷ் கல்யாண் - ப்ரியா பவானிசங்கரின் காதலுக்கு வைக்கப்பட்ட டைட்டில்!

கடந்த இரண்டு நாட்களாக நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் நடிகை பிரியா பவானி சங்கர் ஆகியோர் காதலித்து வருவது போன்ற புகைப்படத்தை தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து பெரும் பரபரப்பை