விஜயா புரடொக்சன்ஸ் - விஜய்சேதுபதி படம் குறித்த முக்கிய தகவல்

  • IndiaGlitz, [Tuesday,October 23 2018]

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகிக்கொண்டிருக்கும் நிலையில் அடுத்தடுத்து அவர் புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியும் வருகிறார். நேற்று யுவன்ஷங்கர் ராஜா தயாரிப்பில் இளையராஜா இசையில் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார் என்ற தகவலை பார்த்தோம். மேலும் அவர் 'சேதுபதி' இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த விஜயா புரடொக்சன்ஸ் தயாரிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரியில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வேல்ராஜ் ஒளிப்பதிவில் பிரவீண் படத்தொகுப்பில் பிரபாகர் கலை இயக்கத்தில் அனல் அரசு சண்டைப்பயிற்சியில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார்.

விஜய்சேதுபதி, விஜயா புரடொக்சன்ஸ் மற்றும் விஜய் சந்தர் ஆகிய மூன்று விஜய்கள் ஒன்று சேர்வதால் இந்த படம் வெற்றி அடைவது உறுதி என கூறப்படுகிறது.

More News

திருமணமான 15 நாளில் குழந்தை பெற்ற மனைவி: அதிர்ச்சியில் புதுமாப்பிள்ளை

ஊத்தங்கரை அருகே ஒரு இளம்பெண் திருமணமாகி 15 நாட்களில் அழகான ஆண்குழந்தை பெற்றதால் மாப்பிள்ளையும் அவரது குடும்பத்தினர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

திமுக, அதிமுகவை வம்புக்கிழுக்கும் சர்கார்' ரசிகர்கள்

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில், விஜய் பேசிய ஒருசில கருத்துக்கள் தமிழக அரசியல்வாதிகளுக்கு கிலியை ஏற்படுத்தியது.

இன்று மாலை 6 மணிக்கு 'சர்கார்' படத்தின் அடுத்த டீசர் ரிலீஸ்

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இĩ

ரசிகர் மன்றத்தின் மூலம் அரசியலில் ஜெயித்துவிடலாம் என்பது பைத்தியக்காரத்தனம்: ரஜினிகாந்த்

ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்து கொண்டு அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்று யாராவது நினைத்தால் அவரது புத்தி பேதலித்துள்ளது

எனக்கே பாவமா இருக்குது: பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் குறித்து கஸ்தூரி

திரையுலகை பொருத்தவரையில் பாலியல் தொல்லை அனுபவம் பெறாத நடிகைகளே மிகவும் குறைவு என்று கூறலாம். ஒருசிலர் இதனை துணிவுடன் எதிர்கொண்டு வெற்றி கொண்டுள்ளனர்.