வாக்களிக்க வந்த இடத்தில் மன்னிப்பு கேட்ட விஜய்: வைரல் வீடியோ

தளபதி விஜய் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வந்த போது வரிசையில் நின்ற வாக்காளர்களிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகம் முழுவதும் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை அடுத்து காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்ய காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தளபதி விஜய் தனது வாக்கை பதிவு செய்ய வந்தார். சிகப்பு நிற காரில் வந்த அவரை பார்த்தவுடன் பத்திரிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் முண்டி யத்ததால் பரபரப்பு ஏற்பட்டது

மேலும் அவரை படம்பிடிக்க போட்டோகிராபர்கள் முண்டி அடித்ததால் அங்கு வாக்களிக்க வரிசையில் நின்ற பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்பட்டது. இதனை அடுத்து தன்னால் ஏற்பட்ட இடைஞ்சலுக்கு வரிசையில் நின்ற பொதுமக்களிடம் விஜய் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டார். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

More News

பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னருடன் நடித்த நடிகை திடீர் கைது: சிறையில் அடைப்பு!

பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னர் உடன் நடித்த நடிகை ஒருவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மழலையர் பள்ளி மீது குண்டுவீச்சு… உக்ரைனில் அதிகரிக்கும் போர்ப்பதற்றம்!

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போர்ப் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உலகநாடுகள் ரஷ்யாவிற்கு

1,000 காதலிகளைக் கொண்ட விசித்திர மனிதனுக்கு 1,045 வருடச்சிறை… நடந்தது என்ன?

துருக்கிய நாட்டைச் சேர்ந்த மதப் போதகர் ஒருவருக்கு இஸ்தான்புல் நீதிமன்றம் கடந்த ஆண்டு 1,045 வருடங்கள் சிறை

தங்கையின் கடைசி ஆசை… 9 கோடி ரூபாயை திருப்பதி கோவிலுக்கு நன்கொடை வழங்கிய அக்கா!

சென்னையைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் திருமணம் செய்துகொள்ளாத

பத்ம விருது பெற்ற பழம்பெரும் நடிகையுடன் லஞ்ச் சாப்பிட்ட ரம்யா கிருஷ்ணன்!

சமீபத்தில் பத்ம விருது பெற்ற பழம்பெரும் நடிகையுடன் லஞ்ச் சாப்பிட்ட அனுபவத்தை நடிகை ரம்யா கிருஷ்ணா தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோவாக வெளியிட்டுள்ள நிலையில்