கன்னியாகுமரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கிய தமிழ் நடிகர்!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் இந்த தேர்தலை சந்திக்க அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம் உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழக சட்ட சபைத் தேர்தலுடன் காலியாக உள்ள கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் பாஜக வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் மீண்டும் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த தொகுதியின் எம்பி ஆக இருந்து சமீபத்தில் மறைந்த எச். வசந்தகுமார் அவர்களின் மகன் விஜய் வசந்த் தான் காங்கிரஸ் வேட்பாளர் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ’சென்னை 28’ உள்பட ஒருசில தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எதிராக போட்டியிடும் விஜய் வசந்த் வெற்றி பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

சென்று வா.. செந்நிறத் தோழனே: எஸ்பி ஜனநாதன் மறைவுக்கு பாரதிராஜா இரங்கல்!

பிரபல இயக்குனர் எஸ்பி ஜனநாதன் கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் அவர் கவலைகிடமாக இருப்பதாக வெளிவந்த செய்தியால்

குக் வித் கோமாளி: எலிமினேட் ஆன பவித்ராவின் உருக்கமான டுவீட்!

இன்றைய குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பவித்ரா எலிமினேட் செய்யப்பட்டார் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் அவர் தனது டுவிட்டரில் உருக்கமான டுவிட்

பிரசாந்தின் 'அந்தகன்' படத்தில் இணைந்த பிக்பாஸ் நடிகை!

பிரசாந்த் நடிப்பில் அவரது தந்தை தியாகராஜன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'அந்தாதூன்' திரைப்படத்தின் ரீமேக் திரைப்படமான 'அந்தகன்' என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பது தெரிந்ததே

திமுகவுக்கு கதை தேவையென்றால் நான் தருகிறேன்: கமல்ஹாசன்

இந்தியா டுடே என்ற ஊடகம் நடத்தும் கான்க்ளேவ் என்ற நிகழ்ச்சியில் பல அரசியல்வாதிகள் கடந்த இரண்டு நாட்களாக கலந்து கொண்டு கேள்விகளுக்கு சுவராசியமான பதில்களை தந்து கொண்டிருக்கிறார்கள்

பிரபல இயக்குனர் ஜனநாதன் காலமானார்!

பிரபல இயக்குநர் எஸ்பி ஜனநாதன் சற்றுமுன் காலமானார். அவரது மறைவு திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பு என திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்