பிக்பாஸ் போட்டியாளர்களின் முகத்திரையை கிழித்த விஜய் வர்மா.. இனி ஆட்டம் சூடு பிடிக்குமா?

  • IndiaGlitz, [Sunday,November 26 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களுக்கு மேல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் திடீர் திருப்பமாக எவிக்சன் ஆன எக்ஸ் எக்ஸ் போட்டியாளர்கள் மீண்டும் ரீஎண்ட்ரி தருவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் முதலாவது நபராக விஜய் வர்மா வீட்டிற்குள் வந்துள்ளார்.

இந்த நிலையில் அவர் உள்ளே வந்ததும் ஏற்கனவே இருக்கும் போட்டியாளர்களின் முகத்திரையை கிழிக்கும் வகையில் ஒவ்வொருவரை பற்றி கூறி அவர்களுடைய புகைப்படத்தை உடைக்கிறார்.

முதல் கட்டமாக அவர் ’சரவணன் விக்ரம், இப்படி ஒரு மாஸ்க் கொடுத்தால் போட்டுக் கொள்வீர்களா’ என கேட்பதோடு ரவீனாவிடம் ’அவன் என்ன சொல்றாங்க நான் செய்றேன் என்பது கேம் அல்ல’ என்று கூறுகிறார்.

‘பூர்ணிமா எப்படி லிங்க் செய்கிறார்கள் என்றால், அவங்க மைண்டுக்குள்ள ஒரு விஷயத்தை ஃபிக்ஸ் பண்ணிக்கிறார்கள், நான் அதைத்தான்பா உன்கிட்ட இருந்து கேட்கணும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்’. ’ஜோவிகா நாட் ரைட்’ , ’நிக்சன் உன்கிட்ட இருக்கிற குவாலிட்டியை எதை நீ மாற்ற வேண்டுமென்றால், நீ பொய் சொல்றதை’ என்று கூறி அனைத்து போட்டியாளர்களின் புகைப்படங்களை அவர் சுத்தியலால் உடைத்து அவர்களுடைய வீக் பாயிண்ட்டை கிழித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனை அடுத்து ஒட்டுமொத்த போட்டியாளர்களும் சேர்ந்து விஜய் வர்மாவை டார்கெட் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இனிதான் ஆட்டம் சூடு பிடிக்க உள்ளதாக பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

More News

இந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் காதல் – தி கோர் ஜோதிகாவை பாராட்டிய பிரபல நடிகை..!

பிரபல மலையாள நடிகர் மம்முட்டியுடன் ஜோதிகா நடித்த   “காதல் – தி கோர்” என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் பிரபல நடிகை ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் ஜோதிகாவின்

வனிதா தாக்கப்பட்ட விவகாரம்.. தாமாக முன்வந்து விசாரிக்கும் காவல்துறை..

நடிகை வனிதா நேற்று நள்ளிரவு மர்ம நபர்களால் தாக்கப்பட்டார் என்று தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்த நிலையில் தன்னை தாக்கியவர் பிரதீப் ஆதரவாளராக இருக்கலாம் என்று கூறியிருந்தார்.

த்ரிஷா உள்பட 3 பிரபலங்கள் மீது மானநஷ்ட வழக்கு.. அதில் ஒருவர் சூப்பர் ஸ்டார்.. மன்சூர் அலிகான் அறிவிப்பு..!

 த்ரிஷா உள்பட 3 பேர் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்போவதாக மன்சூர் அலிகான் தெரிவித்துள்ள நிலையில் அதில் ஒருவர் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் வந்தவுடன் விளையாட்டை ஆரம்பித்துவிட்டார்.. ரீஎண்ட்ரி ஆன போட்டியாளர் குறித்து கமல்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் எவிக்சன் ஆன போட்டியாளர்களில் சிலர் மீண்டும் ரீஎண்ட்ரி ஆகப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய எபிசோடில் விஜய் வர்மா மீண்டும் என்ட்ரி ஆகியுள்ளதாக தெரிகிறது.

'கபாலி' நாயகியுடன் கீர்த்தி சுரேஷ்.. உருவாகிறது த்ரில்லர் வெப்தொடர்..!

கபாலி நாயகியுடன் கீர்த்தி சுரேஷ் ஒரு திரில்லர் வெப் தொடரில் நடிக்க இருப்பதாகவும் இந்த தொடரின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.