'உளறி கொட்டும் மலேசிய மாமா.. முத்து சந்தேகம்.. சிறகடிக்க ஆசையில் அடுத்தடுத்து திருப்பங்கள்..!

  • IndiaGlitz, [Thursday,January 25 2024]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை என்ற சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் குறுகிய காலத்திலேயே இந்த சீரியல் ஏராளமானோர் மனதை கவர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பொங்கலுக்கு அண்ணாமலை தனது மூன்று மகன்கள் மற்றும் மருமகள்களை சொந்த கிராமத்திற்கு அழைத்துச் சென்றுள்ள நிலையில் அங்கு ரோகிணியின் மலேசிய மாமா என செட்டப் செய்யப்பட்டவரும் வருகை தருகிறார்.

மலேசிய மாமாவை கண்டதும் விஜயாவுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. அவருக்கு தகுந்த மரியாதை அளிக்கிறார். ஆனால் மலேசியா மாமா அவ்வப்போது உளறி, முத்து உள்பட அனைவரும் சந்தேகத்திற்கு உள்ளாகி வருகிறார். குறிப்பாக விஜயா காய்கறி வெட்டிக் கொண்டிருக்கும் போது மலேசிய மாமா நானே காய்கறி வெட்டுகிறேன் என கொத்துக்கறியை வெட்டுவது போல் காய்கறி வெட்டுவதை பார்த்து அனைவரும் ஆச்சரியம் மற்றும் சந்தேகம் அடைந்தனர்.

அவரது ஒவ்வொரு சொதப்பல்களையும் ரோகிணி சமாளித்து வந்தாலும் முத்துவுக்கு அவர் மீது சந்தேகம் வந்துவிட்டது. இதுகுறித்து முத்து நண்பர் செல்வத்திடம் இந்த ஆளை தனியாக அழைத்து போய் விசாரித்தால் தெரிந்து விடும் என்று கூறுகிறார்.

இந்த நிலையில் இன்றைய எபிசோடில் பொங்கல் வைக்கும் அன்பான காட்சிகள், குரூப் புகைப்படம் எடுக்கும் காட்சிகள் ஆகியவை உள்ளன. இன்றைய எபிசோடில் மலேசியா மாமா உளறிக் கொண்டிருக்கும் நிலையில் அவரை தனியே அழைத்து கண்டிக்கும் ரோகிணி இனிமேல் ஓவர் ஆக்டிங் செய்யக்கூடாது என்று கூறுகிறார்.

இந்த நிலையில் இன்றைய எபிசோட் முடிவில் ’ரோகினி அம்மா இறந்து விட்டதாக மலேசியா மாமா கூற அப்போது அங்கு வரும் ரோகிணி சும்மா சும்மா அம்மா இறந்து விட்டார்கள் என்று சொல்லாதீர்கள், என் அம்மா உயிரோடுதான் இருக்கிறார் என்று ரோகிணியும் உளறி விடுகிறார் இதனையடுத்து அவர் இதை எப்படி சமாளிக்க போகிறார் என்பதை நாளை எபிசோடில் தான் பார்க்க முடியும். அனேகமாக அத்தை விஜயா, அம்மா மாதிரி இருப்பதாக சொல்லி சமாளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில் மலேசிய மாமாவின் உளறல், முத்துவின் சந்தேகம், குடும்பத்தினர் பொங்கல் கொண்டாட்டம் என இன்றைய எபிசோடு ஜாலியாகவும் பரபரப்பாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கமல்-எச்.வினோத் படம் டிராப்.. மறைமுகமாக அறிவித்த ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாக இருந்த திரைப்படம் காலதாமதம் ஆனதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது கிட்டத்தட்ட அந்த படம் டிராப் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.  

அரசியலில் நுழைகிறார் ஜானி மாஸ்டர்! பிரபல நடிகரின் கட்சியில் இணைந்ததால் பரபரப்பு..!

 தமிழ் தெலுங்கு உட்பட தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட்டில் உள்ள சில படங்களுக்கும் டான்ஸ் மாஸ்டர் ஆக பணிபுரிந்து வரும் ஜானி மாஸ்டர் திடீரென பிரபல நடிகர் ஒருவரின் அரசியல் கட்சியில் இணைந்துள்ளதாக

கட்சியின் பெயரை மாற்றிய தமிழ் வில்லன் நடிகர்.. புதிய பெயர் என்ன?

தமிழ் திரை உலகின் முன்னணி வில்லன் நடிகர்களில் ஒருவர் புதிய அரசியல் கட்சியை சமீபத்தில் தொடங்கிய நிலையில் தற்போது அவர் தனது கட்சியின் பெயரை மாற்றியுள்ளதாக அறிவித்துள்ளார். 

புதிய பல  படைப்புகளுடன் திரையுலகை திரும்பி பார்க்க வைக்கும் இயக்குநர் R.சந்துரு!!

வெறும் 100 ரூபாய் நோட்டுடன் பெங்களூருக்கு வந்து, இன்று  இந்திய சினிமாவே திரும்பிப் பார்க்கும் முக்கியமான கலைஞராக மாறியிருக்கும் அவரது பயணம், வியக்க வைக்கிறது. 400 கோடியில்

நாளை மற்றும் நாளை மறுநாள்: அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும் யோகிபாபுவின் 2 படங்கள்..!

நாளை ஜனவரி 25 மற்றும் நாளை மறுநாள் ஜனவரி 26 ஆகிய இரண்டு நாட்களிலும் அடுத்தடுத்து யோகி பாபு ஹீரோவாக நடித்த திரைப்படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.