close
Choose your channels

3 ஆண்டுகளாக ஒளிபரப்பான  விஜய் டிவியின் முக்கிய சீரியல்.. திடீரென முடிவடைவதால் அதிர்ச்சி..

Wednesday, September 18, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த ஒரு முக்கியமான சீரியல் திடீரென நிறைவடைய போவதாக வெளியான தகவல், பார்வையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை அனைத்து தரப்பு மக்களும் ஆர்வமாக பார்க்கிறார்கள். இந்த நிலையில் திங்கள் முதல் சனி வரை பிற்பகல் 3:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் "முத்தழகு" தொடரும், கடந்த மூன்று ஆண்டுகளாக அதிக வரவேற்பைப் பெற்ற தொடராக உள்ளது. இப்போது, இந்த தொடரின் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும், இந்த வார இறுதியில் இந்த காட்சிகள் ஒளிபரப்பாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

"முத்தழகு" தொடர் திடீரென நிறைவடைவது, ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரில் ஷோபனா நாயகியாக "முத்தழகு" கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார், அவருக்கு ஜோடியாக ஆஷிஷ் சக்கரவர்த்தி நடிக்கிறார். மேலும், வைஷாலி, லட்சுமி வாசுதேவன் உள்ளிட்ட பலர் இதில் முக்கிய கதாப்பாத்திரங்களில் தோன்றுகின்றனர்.

கிராமத்தில் பிறந்து வளர்ந்த முத்தழகு, நகரத்து பின்னணியில் உள்ள நாயகனை திருமணம் செய்துகொள்ளும் நிலையில், திருமணத்துக்குப் பிறகு அவள் எதிர்கொள்ளும் சவால்கள் தான் இந்த தொடரின் கதையாகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment