விஜய் டிவி பிரியங்காவா இவர்? சில வருடங்களுக்கு முன் எப்படி இருக்கிறார் பாருங்கள்!

விஜய் டிவி தொகுப்பாளினி என்றதும் உடனே அனைவருக்கும் ஞாபகம் வருவது டிடி என்கிற திவ்யதர்ஷினி தான். அவருக்கு அடுத்து விஜய் டிவியின் பிரபலமான தொகுப்பாளினியாக தற்போது இருந்து வருபவர் பிரியங்கா என்பதும் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் ஒரு போட்டியாளராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் டிவியில் கடந்த சில வருடங்களுக்கு முன் முதன்முதலாக பிரியங்கா ’ஒல்லிபெல்லி’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஈரோடு மகேஷுடன் பிரியங்கா தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. அந்த புகைப்படத்தில் பிரியங்கா, அந்த நிகழ்ச்சியின் டைட்டில் போலவே ஒல்லியாக இருப்பதை பார்த்து அவரது ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து, ‘நம்ம பிரியங்காவா இவர்? என கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

பிரியங்கா பிக்பாஸ் வீட்டில் இருப்பதால் தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மைனா நந்தினி, மாகாபவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வரும் நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் முடிந்தவுடன் மீண்டும் பிரியங்கா, விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் உள்பட பல நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

இயக்குனர் சசியின் அடுத்த படத்தின் டைட்டில் - மோஷன் போஸ்டர்!

தமிழ் திரை உலகின் தரமான இயக்குனர்களில் ஒருவரான சசி இயக்கும் அடுத்த திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளதை அடுத்து அந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது. 

கோடிகளில் புரண்ட புனித் ராஜ்குமாருக்கு குடிசையில் நினைவு இல்லம்!

கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கோடிகளில் புரண்ட புனித் ராஜ்குமார் சமீபத்தில் காலமான நிலையில் அவரது நினைவு இல்லம் ஒரு குடிசையில் அமைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தள்ளிப்போகிறதா பிக்பாஸ் ஓடிடி: புதிய தேதி என்ன?

பிக்பாஸ் ஐந்தாவது சீசன் வரும் ஞாயிறு அன்று நிறைவு பெற உள்ள நிலையில் பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சி ஜனவரி 23ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் செய்திகள் வெளியான நிலையில்

98 நாட்கள் இருந்த தாமரையின் சம்பளம் இவ்வளவுதானா? 

பிக்பாஸ் வீட்டில் தாமரை 98 நாட்கள் இருந்த நிலையில், அவர் இருந்த நாட்களுக்கான சம்பளம் குறித்த தகவல் வெளியாகி பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

இதுக்கு பேரு ஜல்லிக்கட்டா? பேசாம நிறுத்திடுங்க: பிரபல நடிகர் பேட்டி!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது என்பதும் அவற்றில் ஒரு கட்டுப்பாடு ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட