அருவியில் ஆனந்தக்குளியல் போடும் விஜய் டிவி தொகுப்பாளினி: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Tuesday,February 16 2021]

விஜய் டிவியில் தொகுப்பாளினி ஆகவும் சீரியல்களில் நடித்த நடிகையுமான ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அருவியில் ஆனந்த குளியல் போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் ஸ்ரீரஞ்சனி. இவர் ‘கல்யாணம் முதல் காதல் வரை’ ’நெஞ்சம் மறப்பதில்லை’ உள்பட ஒருசில தொடர்களில் நடித்த பார்கவ் என்பவரை காதலித்து பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். பார்கவ்-ஸ்ரீரஞ்சனி தம்பதிக்கு கடந்த 2019ஆம் ஆண்டு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது.

இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு ஸ்ரீரஞ்சனி தொலைக்காட்சிகளில் அதிகம் தலை காட்டவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஸ்ரீரஞ்சனி தற்போது அருவியில் ஆனந்த குளியல் போடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு கமெண்ட்ஸ்கள் லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவுக்கு கேப்ஷனாக ‘இந்த உலகில் பார்க்கும் இடங்கள் நிறைய இருக்கிறது. நாங்கள் எங்காவது தொடங்க வேண்டும்’ என்று ஸ்ரீரஞ்சனி பதிவு செய்துள்ளார்.

ஸ்ரீரஞ்சனியின் கணவர் பார்கவ் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ’திருமதி ஹிட்லர்’ என்ற தொடரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

More News

2 வருடத்திற்கு பிறகு முதல் விக்கெட்… உணர்ச்சியில் அழத் தொடங்கிய வீரரின் வைரல் புகைப்படம்!

இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து இருக்கும் குல்தீப் யாதவ் சிறந்த ஸ்பின் பவுலராக அறியப்படுகிறார்

சாம்ஜோன்ஸ் தயாரித்து நடிக்கும் படத்தில் பிரபல நடிகை: டைட்டில் அறிவிப்பு!

'ஏமாலி', 'லிசா' உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகர் சாம்ஜோன்ஸ் தற்போது ஒரு திரைப்படத்தை தயாரித்து நடிக்க உள்ளார். இந்த படத்தின் டைட்டில் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது

'வாத்தி கம்மிங்' பாடலுக்கு மைதானத்திலேயே ஸ்டெப் போட்ட அஸ்வின்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்று அபாரமாக வெற்றி பெற்றது.

கேப்டன்ஷியில் புதிய சாதனை படைத்த விராட் கோலி… ரசிகர்கள் மகிழ்ச்சி!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வரும் விராட் கோலி தற்போது டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிப் பெற்ற கேப்டன் என்ற பெருமையை தக்க வைத்துள்ளார்.

சொந்த மண்ணில் ஹீரோவாக இருப்பது எவ்வளவு பெரிய சந்தோஷம்? உருகும் முன்னணி கிரிக்கெட் வீரர்!

இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரை இந்திய வீரர் அஸ்வின்தான் ஹீரோவாக செயல்பட்டார்.