விஜய் ஏற்பாடு செய்த 'தெறி' ஸ்பெஷல் காட்சி யாருக்கு தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,April 27 2016]
இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் தமிழகத்தில் மட்டுமின்றி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். எனவேதான் இரண்டாவது வாரத்திலும் இந்த படம் கிட்டத்தட்ட ஹவுஸ்புல் காட்சிகளுடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் சென்னை பிரசாத் லேபில் 'தெறி' படத்தின் சிறப்புக்காட்சியை முக்கிய விஐபிக்களுக்காக விஜய் ஏற்பாடு செய்துள்ளார். அந்த முக்கிய விஐபிக்கள் யார் தெரியுமா? பிரபல நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நடத்தி வரும் டிரஸ்ட்டில் வளரும் குழந்தைகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
60 குழந்தைகள் 'தெறி' படத்தை உற்சாகமாக பார்த்து மகிழ்ந்தனர். விஜய்யின் முந்தைய படமான 'புலி' படத்தையும் ராகவா லாரன்ஸின் டிரஸ்ட் குழந்தைகள் திரையரங்கில் பார்த்து ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அஜித்-விஜய் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். விஷால்

சமீபத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்த நடிகர் சங்க நிர்வாகிகள் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர்...

என்னை விட இதற்கு சரியான ஆளு அஜித் மட்டும் தான் : சூப்பர் ஸ்டார்

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், வேதிகா நடிப்பில் பி.வாசு இயக்கிய 'ஷிவலிங்கா' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்...

சூர்யாவுக்கு அடுத்து அல்லு அர்ஜுன் தான். '24' விக்ரம்குமார்

'ஆத்ரேயா' உள்பட மூன்று வித்தியாச வேடங்களில் சூர்யா நடித்துள்ள '24' திரைப்படத்தை இயக்கிய விக்ரம்குமார்...

'ஜித்து ஜில்லாடி'யை அடுத்து தேவா பாடிய குத்துப்பாடல்

ஆறே நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை புரிந்த 'தெறி' படத்தில் இடம்பெற்ற 'ஜித்து ஜில்லாடி' என்ற சூப்பர் ஹிட் பாடலை பாடிய தேவா, கருணாகரனுக்காக ஒரு குத்துப்பாடலை பாடியுள்ளார்...

மீண்டும் வருவது யாரென்று தெரிகிறதா? கமலின் அடுத்த பட அழைப்பிதழ்

உலக நாயகன் கமல்ஹாசனின் அடுத்த படத்தின் தொடக்கவிழா நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 29-ஆம் தேதி நடிகர் சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் தொடங்கவுள்ளது...