விஜய்க்கு 5 நாட்களை மிச்சப்படுத்திய அட்லி

  • IndiaGlitz, [Thursday,January 21 2016]

இளையதளபதி விஜய், சமந்தா, எமிஜாக்சன் நடிப்பில் அட்லி இயக்கத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த 'தெறி' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்தது. இந்த படத்தை திட்டமிட்ட நாட்களில் இருந்து முன்கூட்டியே தனது கடுமையான உழைப்பின்மூலம் அட்லி முடித்து கொடுத்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

'தெறி' படத்தை மொத்தம் 140 நாட்களில் படமாக்கி முடிக்க திட்டமிட்டு இருந்ததாகவும் ஆனால் 135 நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதன்மூலம் விஜய்க்கு இயக்குனர் அட்லி ஐந்து நாட்களை மிச்சப்படுத்தி கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் 85 நாட்கள் இடைவெளியின்றி இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றதாகவும் இந்த சாதனை விஜய்யின் ஒத்துழைப்பு மற்றும் கடுமையான உழைப்பினால்தான் சாத்தியமாகியதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

More News

'அரண்மனை 2' சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த விபரங்கள்

சுந்தர் சி இயக்கிய 'அரண்மனை' திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு ரிலீஸாகி மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து தற்போது 'அரண்மனை 2' ...

விஜய் குடும்பத்தில் இருந்து திரைக்கு வரும் இன்னொரு நபர்

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்தில் விஜய்யின் மகள் கேரக்டரில் நடிகை மீனாவின் மகள் நைனிகா நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே...

டைட்டில் ஆனது 'பாட்ஷா' படத்தின் அனல் பறக்கும் வசனம்

பிரபல தயாரிப்பு நிறுவனமான 'லைகா புரடொக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்திற்கு இன்று மாலை...

சமந்தா, நயன்தாரா பாணியை பின்பற்றும் தமன்னா

நடிகை தமன்னா இதுவரை தான் நடித்த படங்களுக்கு டப்பிங் ஆர்ட்டிஸ் மூலம் டப்பிங் பேசப்பட்டு ...

மீண்டும் இணையும் மணிரத்னம்-கமல்ஹாசன்

சமீபத்தில் சென்னையில் சர்வதேச திரைப்பட விழா வெற்றிகரமாக நடைபெற்று முடிவடைந்ததை அடுத்து தற்போது பெங்களூர்...