close
Choose your channels

'தெறி' டப்பிங்கை முடித்தார் சமந்தா

Saturday, February 27, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் சமீபத்தில் விஜய் பகுதிக்கான டப்பிங் மற்றும் எமிஜாக்சன் பகுதிக்கான டப்பிங் பணிகள் முடிவடைந்ததை அடுத்து தற்போது இந்த படத்தின் இன்னொரு நாயகியான சமந்தாவின் டப்பிங் பணிகளும் முடிவடைந்துவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

சமந்தா இந்த படத்தில் சொந்தக்குரலில் டப்பிங் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். 'தெறி படத்தின் டப்பிங் முடிந்தது. இந்த படத்தில் எனக்கு இதயம் கவரும் வகையில் நல்ல கேரக்டர் கொடுத்த இயக்குனருக்கு எனது நன்றி' என்று சமந்தா புகைப்படத்துடன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

விஜய், சமந்தா, எமிஜாக்சன், பிரபு, ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன், சத்யராஜ், மொட்டை ராஜேந்திரன், மீனா மகள் நைனிகா, விஜய் மகள் திவ்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரமாண்டமாக தயாரித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படத்தை அட்லி இயக்கியுள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.