close
Choose your channels

இறுதிக்கட்ட பணியில் விஜய்யின் 'தெறி'

Friday, February 26, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள தெறி' படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், இன்னும் ஒருசில பணிகள் மட்டுமே மீதம் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.


'தெறி' படத்தின் டப்பிங் மற்றும் ரீ-ரிக்கார்டிங் பணிகள் ஆகியவை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தரப்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த படத்தின் டிஜிட்டல் பணிகள் மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் ஆகியவைகளை டெக்னிக்கல் ஊழியர்கள் இரவு பகலாக செய்து வருவதாகவும், கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் என்றும் வரும் தமிழ்ப்புத்தாண்டில் இந்த படம் ரிலீஸாக அனைத்து முன்னேற்பாடுகளையும் தயாரிப்பில் தரப்பில் இருந்து செய்யப்ப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

விஜய், சமந்தா, எமிஜாக்சன், ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன், சத்யராஜ், மொட்டை ராஜேந்திரன், மற்றும் விஜய் மகள் திவ்யா, மீனா மகள் நைனிகா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு பிரமாண்டமாக தயாரித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படத்தை அட்லி இயக்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.