'தெறி'யை கேரளாவில் ரிலீஸ் செய்கிறது பிரபல நடிகையின் நிறுவனம்

  • IndiaGlitz, [Thursday,March 31 2016]

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த 'தெறி' படத்தின் கேரள மாநில உரிமையை 'ஆகஸ்ட் சினிமாஸ்' என்ற நிறுவனம் பெற்றதாக நேற்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் கேரள ரிலீஸ் உரிமை மற்றொரு பிரபல நடிகை மற்றும் நடிகர் இணைந்து நடத்தி வரும் நிறுவனத்திற்கு கைமாறிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
கேரள திரையுலகில் பிரபல நடிகர், நடிகையாக விளங்கி வரும் விஜய்பாபு மற்றும் சாண்ட்ரா தாமஸ் ஆகியோர் இணைந்து நடத்தி வரும் 'Friday Film House' என்ற நிறுவனம்தான் மிகப்பெரிய தொகைக்கு 'தெறி' படத்தின் கேரள ரிலீஸ் உரிமையை தாணுவிடம் இருந்து பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை நடிகை சாண்ட்ரா தாமஸ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுவரை மலையாள படங்களை மட்டுமே தயாரித்தும், ரிலீஸ் செய்தும் வந்த இந்த நிறுவனம் முதன்முதலாக ஒரு தமிழ்ப்படத்தை பிரமாண்டமாக ரிலீஸ் செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை போலவே கேரளாவிலும் விஜய்க்கு அதிகளவில் ரசிகர்கள் கூட்டம் இருப்பதால் கண்டிப்பாக இந்த நிறுவனம் மிகப்பெரிய லாபத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

கேரளாவில் 'தெறி'யை ரிலீஸ் செய்யும் 2 பிரபல நடிகர்கள்

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி கொண்டே வரும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் உரிமை வியாபாரமும் கிட்டத்தட்ட...

சூர்யாவின் '24' படத்தின் புதிய அப்டேட்

சூர்யா மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ள '24' படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து...

தனுஷுடன் 3வது முறையாக இணைந்தது லைகா

தனுஷ் தயாரிப்பில் ஏற்கனவே உருவாகிய 'நானும் ரவுடிதான்' மற்றும் 'விசாரணை' ஆகிய இரண்டு படங்களையுமே லைகா நிறுவனம்தான் வாங்கி வெளியிட்டது...

ரஜினி தயாரிப்பாளர் படத்தில் தனுஷ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'லிங்கா' திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்றதோடு விநியோகிஸ்தர்களின் அதிருப்தியையும் சம்பாதித்தது...

கிஷோர் குடும்பத்திற்கு உதவிய சரத்குமார்-சிவகார்த்திகேயன்

நேற்று முன் தினம் 63வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது என்பதும் 'விசாரணை' படத்திற்காக சிறந்த எடிட்டர் விருது மறைந்த கிஷோர்...