close
Choose your channels

'தெறி' வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தாணு

Saturday, February 20, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' திரைப்படம் வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த படத்தின் வியாபாரம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் 'தெறி' படத்தின் உலகம் முழுவதிலும் உள்ள ரிலீஸ் உரிமையை லைகா நிறுவனம் பெற்றுவிட்டதாக ஒரு செய்தி இணையதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

இதுகுறித்து வரும் செய்திகளை இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு உறுதியாக மறுத்துள்ளார். 'தெறி' படத்தின் வியாபாரம் சம்பந்தமாக லைகா நிறுவனத்திடம் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்றும் இது முழுக்க முழுக்க வதந்தி என்றும் இந்த தகவல் 200% பொய்யானது என்றும் கூறியுள்ளார்.
விஜய், சமந்தா, எமிஜாக்சன், ராதிகா, இயக்குனர் மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ள 'தெறி' படத்தை அட்லி இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த இவ்வருடத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்புள்ள படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.