'தெறி' வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தாணு

  • IndiaGlitz, [Saturday,February 20 2016]

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' திரைப்படம் வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த படத்தின் வியாபாரம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் 'தெறி' படத்தின் உலகம் முழுவதிலும் உள்ள ரிலீஸ் உரிமையை லைகா நிறுவனம் பெற்றுவிட்டதாக ஒரு செய்தி இணையதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

இதுகுறித்து வரும் செய்திகளை இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு உறுதியாக மறுத்துள்ளார். 'தெறி' படத்தின் வியாபாரம் சம்பந்தமாக லைகா நிறுவனத்திடம் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்றும் இது முழுக்க முழுக்க வதந்தி என்றும் இந்த தகவல் 200% பொய்யானது என்றும் கூறியுள்ளார்.
விஜய், சமந்தா, எமிஜாக்சன், ராதிகா, இயக்குனர் மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ள 'தெறி' படத்தை அட்லி இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த இவ்வருடத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்புள்ள படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'தெறி' வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தாணு

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' திரைப்படம் வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த படத்தின் வியாபாரம் குறித்து...

'பிரேமம்' தெலுங்கு ரீமேக்கில் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 'நேரம்' நடிகர் நிவின்பாலி, மடோனா செபாஸ்டியன், சாய்பல்லவி நடித்த 'பிரேமம்' திரைப்படம் கேரளாவில் மட்டுமின்றி சென்னையிலும்...

ஜி.வி.பிரகாஷ்-எம்.ராஜேஷ் படத்தின் நாயகிகள் குறித்த தகவல்

பிரபல இசையமைப்பாளராக மட்டுமின்றி பிரபல நடிகராகவும் மாறிவிட்ட ஜி.வி.பிரகாஷ் தற்போது புரூஸ்லீ, எனக்கு இன்னொரு பேர் இருக்கு ஆகிய படங்களில் நடித்து வரும் நிலையில் பிரபல இயக்குனர் எம்.ராஜேஷ் படத்தில்...

'கவலை வேண்டாம்' படத்தின் கதை இதுதான்

ஜீவா தற்போது மூன்று படங்களில் நடித்து வருகிறார். அவற்றில் போக்கிரி ராஜா' மற்றும் 'திருநாள்' ஆகிய இரண்டு படங்கள் கிட்டத்தட்ட ரிலீஸுக்கு தயாராகிவிட்டது...

தனுஷ்-கவுதம்மேனன் படத்தில் முதன்முதலாக இணையும் பிரபலம்

தனுஷ் இரு வேடங்களில் நடித்து வரும் 'கொடி' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது என்றும் இந்த படத்தை அடுத்து அவர் கவுதம் மேனன்...