விஜய் டிவி  சீரியல் நாயகிக்கு கிடைத்த சினிமா வாய்ப்பு.. ஹீரோ யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,August 21 2024]

விஜய் டிவி சீரியல் நடிகைக்கு சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளதை அடுத்து இந்த படத்தின் ஹீரோ யார் என்பது உள்பட சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’காற்றுக்கென்ன வேலி’ என்ற சீரியலில் நடித்த பிரியங்கா குமார், கன்னட திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஏற்கனவே இரண்டு தெலுங்கு படங்களில் நடித்துள்ள நிலையில் அவரது மூன்றாவது திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தனக்கு கன்னட திரைப்பட வாய்ப்பு கிடைத்தது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியங்கா பகிர்ந்து உள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனனர்.

’தூர தீர யான’ என்ற கன்னட படத்தில் தான் நாயகி ஆக நடிக்க இருப்பதாகவும் தனக்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகர் விஜய் கிருஷ்ணா நடிக்க இருப்பதாகவும் அறிவித்து ஒரு புதிய போஸ்டரையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ள நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

More News

'மகாராஜா' படத்தை மிஸ் செய்தாரா சாந்தனு? அவரே சொன்ன தகவல்..!

இந்தியாவின் தலைசிறந்த திரைக்கதை ஆசிரியர் என்று கே.பாக்யராஜ் போற்றப்படும் நிலையில் அவரது மகன் சாந்தனு ஒரே ஒரு சூப்பர் ஹிட் வெற்றி படத்திற்காக பல ஆண்டுகளாக காத்திருக்கிறார்.

பழம்பெரும் நடிகர் சோ மனைவி காலமானார். அரசியல் தலைவர்கள் இரங்கல்..!

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் சோ ராமசாமி கடந்த 2016 ஆம் ஆண்டு காலமான நிலையில் அவரது மனைவி இன்று காலை காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தோனி, சச்சினை அடுத்து இன்னொரு கிரிக்கெட் வீரரின் பயோகிராபி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

இந்திய கிரிக்கெட் வீரர்களான மகேந்திர சிங் தோனி மற்றும் சச்சின் டெண்டுல்கர் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு

'வேட்டையன்' 'விடாமுயற்சி' அப்டேட்.. ரஜினி, அஜித் ரசிகர்கள் குஷி..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வரும் 'வேட்டையன்' மற்றும் அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' ஆகிய இரண்டு படங்களையும் தயாரித்து வரும் லைக்கா நிறுவனம்

திருத்தணி முருகன் கோவில்: சீதா சுரேஷ் அவர்கள் விளக்கும் ரகசியங்கள்!

பிரபல ஜோதிடர் சீதா சுரேஷ் அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் திருத்தணி முருகன் கோவிலின் ஆழமான ரகசியங்களைப் பகிர்ந்துள்ளார்.