தீபாவளி ரேஸில் ஐந்து முன்னனி நடிகர்களின் படங்கள் ரிலீஸா?

  • IndiaGlitz, [Friday,June 29 2018]

வரும் தீபாவளி தினத்தில் விஜய்யின் 'சர்கார்', அஜித்தின் 'விசுவாசம்' மற்றும் சூர்யாவின் 'என்.ஜி.கே' ஆகிய திரைப்படங்கள் வெளியாகலாம் என்று கூறப்பட்டது. ஆனால் தீபாவளி ரேஸில் இருந்து அஜித்தின் 'விசுவாசம்' விலகி பொங்கலுக்கு சென்றுள்ளதால் இந்த இடத்தை நிரப்ப மேலும் சில முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக தனுஷின் 'மாரி 2' படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் தொடங்கிவிட்டதால் இந்த படமும் தீபாவளி ரேஸில் இணைய வாய்ப்பு உள்ளது. மேலும் விஷாலின் 'சண்டக்கோழி 2', மற்றும் விக்ரமின் 'சாமி 2' ஆகிய படங்களும் தீபாவளி ரேஸில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் தீபாவளி திருநாளாக இருந்தாலும் ஒரே நேரத்தில் ஐந்து முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆனால் போதுமான திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கலும், பெரிய நடிகர்களின் படங்களின் ஓப்பனிங் வசூல் பாதிக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த படங்களின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் வரை பொறுமை காப்போம்

More News

'8 தோட்டாக்கள்' இயக்குனரின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு    

இளம் இயக்குனர் ஸ்ரீகணேஷ் தனது திறமையான திரைக்கதையை வைத்து இயக்கிய திரைப்படம் '8 தோட்டாக்கள்'. துப்பாக்கியைப் பறிகொடுக்கும் இளம் போலீஸ் அதிகாரியையும்,

தியேட்டரில் உணவு பொருட்களை அதிக விலைக்கு விற்றவரை தாக்கிய அரசியல்வாதி

சமீபத்தில் தியேட்டர் கட்டணம், பார்க்கிங் கட்டணம் அதிகரிக்கப்பட்டது தெரிந்ததே. இத்துடன் சேர்த்து ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தால் அதற்கு வேறு தனிக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த  நடிகர் பிரபு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டமன்றத்தில் பேசியபோது, 'நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட உள்ளதாக அறிவித்தார்.

அம்பானி மகன் நிச்சயதார்த்ததில் காதலருடன் கலந்து கொண்ட பிரபல நடிகை

இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கும், அவரது நீண்ட நாள் தோழியான ஷிலேகா மேத்தாவுக்கும் நேற்று மும்பையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த

தூத்துகுடி விவகாரத்தில் கைதான நடிகைக்கு ஜாமீன்

தூத்துகுடி துப்பாகி சூடு சம்பவம் குறித்து பல நட்சத்திரங்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். மேலும் கமல், ரஜினி உள்பட பல நடிகர்கள் தூத்துகுடிக்கு நேரடியாக சென்று மக்களுக்கு ஆறுதல் கூறினர்.