close
Choose your channels

பிகில்' படத்தின் அடுத்தகட்ட பணியை தொடங்கிய விஜய்!

Wednesday, August 7, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஜய் பகுதியின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்ட நிலையில் அடுத்தகட்ட பணியை விஜய் தற்போது தொடங்கியுள்ளார். அதாவது தனது பகுதியின் டப்பிங் பணியை விஜய் தற்போது தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் அவர் இந்த பணியை முடித்துவிடுவார் என்றும் அதனையடுத்து நயன்தாரா உள்ளிட்ட கேரக்டர்களின் டப்பிங் பணிகள் நடைபெறும் என தெரிகிறது

இந்த நிலையில் பாடல்கள் கம்போஸிங் பணியை சமீபத்தில் முடித்த இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் தற்போது பின்னணி இசை பணியையும் தொடங்கி உள்ளார் என்று தெரியவருகிறது. மொத்தத்தில் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இந்த படத்தின் பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படம் விஷ்ணு ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் வளர்ந்து வருகிறது. ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான உருவாகி வரும் இந்த படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment