விஜய் மகன் சஞ்சய் இயக்கிய குறும்படம்.. செம்ம தரமான காட்சிகள்..!

  • IndiaGlitz, [Saturday,April 22 2023]

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய குறும்படம் இணையதளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இந்த குறும்படத்தை பார்த்து ரசிகர்கள் தரமான படம் என்றும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட காட்சிகள் உள்ளது என்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் திரைப்பட கல்லூரியில் படித்தார் என்பதும் அவர் எதிர்காலத்தில் இயக்குனர் ஆக வேண்டும் என்பதே அவரது ஆசை என்றும் கூறப்பட்டது. அவரை நடிக்க வைக்க ஒரு சில முயற்சிகள் நடந்தது என்றும் குறிப்பாக அல்போன்ஸ் மித்ரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருந்ததாகவும் ஆனால் சஞ்சய் இப்பொழுது வேண்டாம் என்று கூறி விட்டதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் அவ்வப்போது குறும்படங்களை இயக்கி யூடியூப் தளத்தில் பதிவு செய்து வரும் சஞ்சய் சமீபத்தில் ஒரு குறும்படத்தை இயக்கி உள்ளார். Pull The Trigger என்ற டைட்டில் கொண்ட இந்த குறும்படத்தில் உள்ள காட்சிகளை பார்க்கும்போது தரமாக உள்ளது என்றும் ஒரு கைதேர்ந்த இயக்குனரின் வடிவத்தில் உருவானது போல் இருக்கிறது என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். ஜேசன் சஞ்சய் நிச்சயமாக எதிர்காலத்தில் ஒரு வித்தியாசமான இயக்குனராக ஜொலிப்பார் என்றும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

நாங்கள் இருவருமே கூச்ச சுபாவத்துடன் இருந்தோம்: சூர்யா சந்திப்பு குறித்து கிரிக்கெட் பிரபலம்..!

நடிகர்  சூர்யா சந்திப்பு குறித்து கூறிய பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியபோது, 'முதல் சந்திப்பின்போது நாங்கள் இருவருமே கூச்ச சுபாவத்துடன் இருந்தோம் என்று தெரிவித்துள்ளார். 

'PS 2' படத்தில் கமல்ஹாசன்.. என்ன அழகாக கதைச்சுருக்கத்தை சொல்லியுள்ளார்.. வைரல் வீடியோ..

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம் வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள்

'கொலை பண்றது வீரமல்ல, 10 பேர காப்பாத்துறதுதான் வீரம்'.. அருள்நிதியின் 'கழுவேத்தி மூர்க்கன்' டீசர்

அருள்நிதி நடித்த 'கழுவேத்தி மூர்க்கன்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் சற்று முன் வெளியாக

சென்னை ஐஐடியில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை.. 3 மாதத்தில் 4 தற்கொலைகள்..!

சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த மூன்று மாதங்களில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ஓடிடியில் சிம்புவின் 'பத்து தல': எந்த ஓடிடியில்? எப்போது?

சிம்பு நடிப்பில் உருவான 'பத்து தல' திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது என்பதும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது