ரஜினியுடன் அதிகாரபூர்வமாக இணைந்த விஜய்சேதுபதி

  • IndiaGlitz, [Thursday,April 26 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'காலா' திரைப்படம் வரும் ஜூன் மாதமும், '2.0' ஆகிய திரைப்படம் வெகுவிரைவிலும் வெளியாகவுள்ள நிலையில் ரஜினிகாந்த் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.

சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த பிரமாண்டமான படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. குறிப்பாக இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை உள்பட மற்ற நடிகர், நடிகையர் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பீட்சா, ஜிகர்தண்டா மற்றும் இறைவி ஆகிய மூன்று படங்களிலும் நடித்த மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, இந்த படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். ரஜினியுடன் முதல்முறையாக விஜய்சேதுபதி இணைந்துள்ளது இந்த படத்தின் எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்த படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளதாக வதந்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு என்ன கேரக்டர் என்பதை படக்குழுவினர் தெரிவிக்கும் வரை பொறுமை காப்போம்

 

More News

யாரு திமில யாரு அடக்கப்பாக்குறது.. வெற்றிக்கு பின் ஹர்பஜன்சிங் டுவீட்

நேற்று பெங்களூரில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விராத் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணியை அதன் சொந்த மண்ணில் தல தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

தோனியை புகழ்ந்த பிரபல வீரர்

நேற்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணி கொடுத்த 206 என்ற இலக்கை எட்டுவது என்பது கடினமான ஒன்று என்றே கிரிக்கெட் விமர்சர்கள் கருத்து கூறினர்

விஜய்யிடம் பிடித்தது, அஜித்திடம் பிடிக்காதது: விஷால்

ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த விஷால், விஜய்யிடம் பிடித்த விஷயம் குறித்தும், அஜித்திடம் பிடிக்காத விஷயம் குறித்தும் மனம் திறந்து கூறியுள்ளார். 

சிவகுமார் குடும்பத்தில் இருந்து திரையுலகிற்கு வந்த அடுத்த நபர்

பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் குடும்பத்தில் இருந்து திரையுலகிற்கு வந்த சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவருமே தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக உள்ளனர்.

கமல்ஹாசனுக்கு முதல் குரல் கொடுத்த பின்னணி பாடகி மரணம்

'களத்தூர் கண்ணம்மா' என்ற படத்தில் 'அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற பாடலை பாடிய பழம்பெரும் பின்னணி பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 87