கூத்துப்பட்டறை முத்துசாமி மறைவிற்கு விஜய்சேதுபதி இரங்கல்

  • IndiaGlitz, [Wednesday,October 24 2018]

இன்று உயர்ந்த நிலையில் உள்ள பல கலைஞர்களை செதுக்கிய கூத்துப்பட்டறை நா.முத்துசாமி இன்று காலமானார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அவருடைய மறைவால் திரையுலகமே அதிர்ச்சி அடைந்துள்ளது.

குறிப்பாக கூத்துப்பட்டறையில் மூலம் திரையுலகில் அறிமுகமாகி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய்சேதுபதி தனது ஆழ்ந்த இரங்கலை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது:

மிகுந்த மனவருத்ததுடன் பகிர்கிறேன்... கூத்துப்பட்டறையின் தந்தை.. எங்கள் ஆசான் முத்துசாமி அய்யா அவர்கள் இன்று காலமானார் என்று விஜய்சேதுபதி பதிவு செய்துள்ளார். ‘கூத்துப்பட்டறை’ எனும் நவீன நாடகப் பயிற்சிப் பள்ளியை உருவாக்கி, 40 ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான கலைஞர்களையும் நட்சத்திரங்களையும் உருவாக்கிய ந.முத்துசாமி. அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என பலர் விஜய்சேதுபதியின் டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.