மீண்டும் நயன்தாரா படத்தில் விஜய்சேதுபதி?

  • IndiaGlitz, [Monday,October 31 2016]

விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்த 'நானும் ரெளடிதான்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் இதே வெற்றி ஜோடி மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
'டிமாண்டி காலனி' இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப், ராஷி கண்ணா, ஆகியோர் நடித்து வரும் 'இமைக்கா நொடிகள்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் விஜய்சேதுபதி இணைந்துள்ளார். அவர் நயன்தாராவுக்கு ஜோடியா? அல்லது வேறு கேரக்டரில் நடிக்கின்றாரா? என்பது குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை.
ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கும் இந்த படத்திற்கு பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் திரைக்கதை-வசனம் எழுதுகிறார். கேமியோ பிலிம்ஸ் இண்டியா தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திர்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவாளராகவும், புவன்ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிகின்றனர்.

More News

சென்னை விமான நிலையத்தில் முகமூடியுடன் விஜய்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் பாடல் ஒன்றின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சுவிட்சர்லாந்து...

'கொடி', 'காஷ்மோரா' சென்னை ஓப்பனிங் வசூல் நிலவரம்

கடந்த தீபாவளியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான கார்த்தியின் 'காஷ்மோரா' மற்றும் தனுஷின் 'கொடி' ...

பிரதமர் மோடியுடன் நடிகை கவுதமி திடீர் சந்திப்பு

பிரபல நடிகையும் கமல்ஹாசனின் துணைவியுமான கவுதமி புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தது மட்டுமின்றி புற்று நோய் விழிப்புணர்வுக்காக பல அரிய சேவைகள் செய்து வருகிறார்.

காவல்துறை உயரதிகாரிகளுடன் தீபாவளி கொண்டாடிய பிரபல நடிகர்

தென்னிந்திய நடிகர் சங்க செயலாளராக நடிகர் விஷால் பதவியேற்றதில் இருந்து நலிந்த நடிகர்களுக்கு மட்டுமின்றி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் அவ்வப்போது தனது தேவி அறக்கட்டளை மூலம், தனது சொந்த பணத்தில் இருந்தும் உதவி செய்து வருகிறார்.

'அச்சம் என்பது மடமையடா' ரிலீஸ் தேதி.

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.