சூர்யாவுக்கு விஜய் சேதுபதியிடம் இருந்து கிடைத்த 'சிறப்பான' ஆதரவு

  • IndiaGlitz, [Wednesday,April 29 2020]

சமீபத்தில் சினிமா விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகா தஞ்சை பெரிய கோவில் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பேசியதாக வதந்தி பரப்பப்பட்டது. கோவில்களுக்கு செலவு செய்வது போல் மருத்துவமனைகளுக்கும் பள்ளிகளுக்கும் செலவு செய்யுங்கள் என்று ஜோதிகா கூறியதை பலர் திரித்து அவரை கடுமையாக கண்டனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 

நெட்டிசன்களின் இந்த விமர்சனங்களுக்கு பதிலடியாக திரையுலகைச் சேர்ந்த பலர் கருத்து தெரிவித்த நிலையில் நேற்று நடிகர் சூர்யாவும் தனது தரப்பில் விளக்கம் அளித்து ஒரு அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில் ஜோதிகா தவறாக எதுவும் பேசவில்லை என்றும் திருமூலர் உள்ளிட்ட பல பெரியவர்கள் பேசியதைத்தான் அவர் பேசியுள்ளார் என்றும் எனவே அவர் பேசிய கருத்திலிருந்து தாங்கள் பின்வாங்கப் போவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

சூர்யாவின் இந்த அறிக்கைக்கு ஊடகங்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் ஆதரவும் பாராட்டுக்களும் தெரிவித்துவரும் நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் ’சிறப்பு’ என்று கூறிய சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். விஜய்சேதுபதியின் இந்த ஆதரவு கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

More News

ஊரடங்கில் இருப்பதால் அதிகமாக சாப்பிடுகிறீர்களா??? அடிப்படைக் காரணம் என்ன??

கடந்த மூன்று மாதங்களாக கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தின் இயல்பு வாழ்க்கையையே புரட்டிப் போட்டிருக்கிறது.

தமிழகத்தில் இன்று 121 கொரோனா பாசிட்டிவ்: சென்னையில் மட்டும் 103

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன் இன்று தமிழகத்தில் 121 பேர் புதியதாக கொரோனா

பிரபல நடிகரின் கொரோனா தடுப்பு நிதியுதவி ரூ.30 கோடியாக உயர்வு!

பிரபல பாலிவுட் நடிகர் அக்சயகுமார் ஏற்கனவே கொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரதமர் நிவாரண நிதிக்கு 25 கோடி ரூபாய் வழங்கினார் என்பது தெரிந்ததே

டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 'லட்சுமி பாம்' படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு

கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன

விஜயகாந்தின் ஒரே ஒரு போன்கால்: அந்தமான் மீனவர்களுக்கு போய் சேர்ந்த உதவிகள்

அந்தமானில் தமிழக மீனவர்கள் ஊரடங்கு காரணமாக உணவு உள்பட அடிப்படை தேவைகள் கூட இல்லாமல் இருப்பதை அறிந்து விஜயகாந்த் அவர்களுக்கு உதவி செய்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது