சென்னை என்னுடைய நண்பன்: விஜய்சேதுபதி வீடியோ வைரல்!

  • IndiaGlitz, [Sunday,August 22 2021]

இன்று சென்னையின் 382ஆவது தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சென்னை மக்கள் சென்னையின் பெருமை குறித்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சென்னையில் பெருமை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

ஆகஸ்ட் 22ஆம் தேதி சென்னை தினத்தை நாம் கொண்டாடி வருகிறோம். சென்னையை பொருத்தவரை ஒரு மிகப்பெரிய பாசிட்டிவ் ஆன்மா இந்த ஊரில் உள்ளது. இந்த ஊரை நம்பி யார் வேண்டுமானாலும் வரலாம், சென்னை எல்லாருக்குமான நகரம் என்று நினைக்கிறேன். நீங்கள் கற்றுக் கொண்டு மேலே வரவேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு சென்னை ஒரு மிக நகரம்.

நீங்கள் வாழ்க்கையில் என்னவாக விரும்புகிறீர்களோ அதற்கு சென்னை நமக்குத் துணையாக இருக்கும். சென்னையே ஒரு மிகச் சிறந்த நண்பன் தான். இந்த ஊரில் நாம் பார்த்த நண்பர்கள் எல்லாம் தாண்டி சென்னை ஒரு மிகச் சிறந்த நண்பன். அந்த நண்பன் உங்கள் தோளில் கை போட்டுக்கொண்டு உங்களுக்கு துணையாக இருக்க்கும். எப்பொழுது வேண்டுமானாலும் எத்தனை மணிக்கு வேண்டுமானாலும் உங்களுக்கு என்ன தேவையோ அது சென்னையில் கிடைக்கும். எல்லாருக்காகவும் எப்போதும் தயாராக இருக்கும் நகரம்தான் சென்னை.

உலகத்தில் எங்கு சென்றாலும் சென்னைக்கு எப்போது வருவோம் என்ற எண்ணம்தான் அனைவர் மனதிலும் ஏற்படும். சென்னை வந்தவுடன் ஒரு மனத்திருப்தி, நிம்மதி இருக்கும். நான் சென்னைக்கு ரொம்ப நன்றி கடன் பட்டு இருக்கின்றேன். இவ்வாறு விஜய்சேதுபதி அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

More News

'ராட்சசன்' இந்தி ரீமேக்கில் அமலாபால் வேடத்தில் தமிழ் நடிகை?

விஷ்ணு விஷால் நடிப்பில் ராம்குமார் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'ராட்சசன்'. இந்த படம் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தெலுங்கில் ராக்ஷசுடு என்ற டைட்டிலில்

'பீஸ்ட்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இந்த நகரத்திலா? 

தளபதி விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவிலும், இரண்டாவது மற்றும் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நடைபெற்றது என்பது தெரிந்ததே.

திருமணம் செய்யலாமா? என்று கேட்ட ரசிகருக்கு குஷ்புவின் ஷாக்கிங் பதில்!

உங்களை திருமணம் செய்யலாமா என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு குஷ்புவின் ஷாக்கிங் பதில் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது 

ஐஸ்வர்யாராயின் 'ரக்சாபந்தன்' வாழ்த்து புகைப்படத்தில் நெட்டிசன்கள் கண்டுபிடித்தது என்ன தெரியுமா?

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'ரக்சாபந்தன்' வாழ்த்து தெரிவித்து 2 புகைப்படங்கள் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தில் உள்ள ஒரு

3 நடிகர்கள், 3 நடிகைகள், ஒரு நடன இயக்குனர், ஒரு ஆங்கர்: சர்வைவர் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள்! 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையாக 'சர்வைவர்' என்ற புதிய நிகழ்ச்சி விரைவில் ஜீ டிவியில் ஆரம்பமாகப் போகிறது என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள்