காவிரி பிரச்சனை குறித்து விஜய்சேதுபதியின் உணர்ச்சிகரமான கருத்து

  • IndiaGlitz, [Tuesday,September 13 2016]

காவிரி பிரச்சனை இரு மாநிலங்களுக்கு இடையே பெரிய சென்சிட்டிவ் பிரச்சனையாக உருவாகியுள்ள நிலையில் கோலிவுட் நட்சத்திரங்கள் மிகவும் பொறுப்புடன் செயல்பட்டு வருகின்றனர் என்பதை அவ்வப்போது வரும் செய்திகளின் மூலம் பார்த்து வருகிறோம். இந்நிலையில் விஜய்சேதுபதி இதுகுறித்து தனது உணர்ச்சிகரமான கருத்தை வீடியோ ஒன்றின்மூலம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
காவிரி பிரச்சனை குறித்து நான் பேச விரும்பவில்லை. ஆனால் இந்த பிரச்சனையை வைத்து அப்பாவி பொதுமக்கள் தாக்கப்படுவதை நினைத்தால் கவலை ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்சனைகளை தீர்ப்பதற்காகத்தான் நாம் ஓட்டு போட்டு தலைவர்களை தேர்ந்தெடுத்துள்ளோம். இந்த பிரச்சனையை அவர்கள் கையாளட்டும். அவர்கள் இதற்கு ஒரு நல்ல தீர்வு காண்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
சாதாரண பொதுமக்கள் ஒருநாள் வேலைக்கு செல்லவில்லை என்றாலும் அவர்களுடைய குடும்பம் பெரும் கஷ்டத்தை சந்திக்க நேரிடும். வேலைக்கு சென்றவர் நல்ல முறையில் வீடு திரும்ப வேண்டும் என்று அவருடைய குடும்பமே காத்திருக்கும்.
இந்த பிரச்சனையை காலங்காலமாக சிலர் தூண்டி வருகின்றனர். அதை நாம் உணர வேண்டும். நாம் அனைவரும் அன்பை மட்டுமே பரிமாறிக்கொள்ள வேண்டும். எனது மொழியை எனது தாய் போல் நேசிக்கின்றேன். அதேபோல் நாங்கள் உங்கள் மொழியையும், உங்களையும் நேசிக்கின்றோம். எனவே இந்த பிரச்சனையை நமது அரசாங்கம் தீர்த்து வைக்க வலியுறுத்த வேண்டுமே தவிர வன்முறையில் இறங்குவது முறையாகாது. நான் மிகவும் வேண்டி கேட்டுக்கொள்வது ஒன்றுதான். வன்முறையை கைவிடுவோம். தயவு செய்து அப்பாவிகள் மீதான தாக்குதல் வேண்டாம். இவ்வாறு விஜய்சேதுபதி கூறியுள்ளார்.

More News

3 பேர் சஸ்பெண்ட் விவகாரம். விஷாலுக்கு ராதிகா சரமாரி கேள்வி

முன்னாள் நடிகர் சங்க நிர்வாகிகளான சரத்குமார், ராதாரவி, மற்றும் வாகை சந்திரசேகர் ஆகியோர் நடிகர் சங்கத்தின் பணத்தை முறைகேடு...

இணைந்து செயல்பட விரும்புகிறோம். தயாரிப்பாளர் சங்கத்திற்கு நடிகர் சங்கம் கடிதம்

கடந்த சில நாட்களாக தயாரிப்பாளர் சங்கத்தையும் நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் கைப்பற்ற போவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில்...

வெங்கட்பிரபுவின் 'சென்னை-28 2ஆம் பாகத்தின் ரிலீஸ் தேதி

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வந்த 'சென்னை 600028' படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில நாட்களுக்கு...

மணிரத்னம் இயக்கத்தில் மற்றொரு சூப்பர் ஸ்டாரின் மகன்

இந்திய திரையுலகில் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்பாத நடிகர், நடிகைகளே இல்லை என்று கூறலாம். உலக அழகி ஐஸ்வர்யாராய்...

நன்றியை மாறி மாறி பரிமாறி கொண்ட சிம்பு-கவுதம் மேனன்

கவுதம் மேனன் நடிப்பில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்து வந்த 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் படப்பிடிப்பு தற்போது முற்றிலும் முடிவடைந்துள்ள நிலையில் சிம்புவும், கவுதம் மேனனும்...