பேரறிவாளன் விடுதலைக்காக களமிறங்கும் கோலிவுட்

  • IndiaGlitz, [Thursday,June 09 2016]

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்பட ஏழுபேர்களை விடுதலை செய்ய, வரும் 21ஆம் தேதி வேலூர் சிறைச்சாலை முதல் சென்னை கோட்டை வரை பிரமாண்டமான பேரணி நடைபெறவுள்ளது. இந்த பேரணிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் பேரறிவாளனை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழ் திரையுலகம் தற்போது களத்தில் இறங்கியுள்ளது.ஏற்கனவே நடிகர் சத்யராஜ், நடிகர் விஜய்சேதுபதி, இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்ட பல திரையுலகினர் குரல் கொடுத்துள்ள நிலையில் தற்போது நடிகை ரோகிணி மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர்களும் குரல் கொடுத்துள்ளனர்.

நடிகை ரோகிணி இதுகுறித்து கூறியதாவது: 'பேரறிவாளன் சிறை சென்று 25 வருடங்கள் முடிந்துவிட்டன. இந்தப் பிரச்னையில், சரி தவறு என்பதைத் தாண்டி மனிதத்தன்மையோடு அணுக வேண்டும். 25 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், பேரறிவாளன் உள்பட மற்ற ஆறு பேரின் விடுதலையை மிக முக்கியமான நிகழ்வாகப் பார்க்கிறேன். தன்னுடைய மகனின் விடுதலைக்காகப் போராடும் அற்புதம் அம்மாளின் போராட்டத்தை நாம் பார்த்துக் கொண்டு வந்திருக்கிறோம்.

தமிழக அரசு நமக்குத் துணையாக இருக்கிறது. ' அவர்கள் வெளியே வர வேண்டும்' என்பதில் அரசும் உறுதியாக இருக்கிறது. அவர்கள் ஏழு பேரையும் விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என்பதை அரசுக்கு பிரார்த்தனையாக முன் வைக்கிறேன். இந்தப் பேரணியில் கலந்து கொள்வதற்கு அனைவரும் திரளாக வர வேண்டும். ' நாங்கள் இருக்கிறோம்' என்று அற்புதம் அம்மாளுக்கு நாம் சொன்னாலும், அவருடைய குழந்தை வெளியே வந்தால்தான் அந்தத் தாயின் மனதை ஆற்ற முடியும். ஏழு பேரின் குடும்பத்தின் எதிர்காலமும் இவர்களின் விடுதலையை ஒட்டித்தான் இருக்கிறது. வாகனப் பேரணியில் திரளாகப் பங்கேற்பதன் மூலம், நமது மனஉறுதியை வெளிப்படுத்த வேண்டும். ' நாங்கள் உங்களுக்குத் துணையாக இருப்போம்' என அற்புதம் அம்மாளிடம் சொல்லியிருக்கிறேன். பேரணியில் சந்திப்போம்" என்று கூறியுள்ளார்.

இயக்குநர் வெற்றி மாறன் இதுகுறித்து கூறியதாவது: எந்த ஒரு தண்டனையாக இருந்தாலும், 25 வருடங்கள் தனிமைச் சிறையில் கழிக்க வேண்டிய அவசியம் இல்லை. இத்தனைக் காலமும் அவர்கள் விடுதலை செய்யப்படாமல் உள்ளனர். அவர்களின் விடுதலைக்காக தமிழக முதல்வர் சில முயற்சிகளை எடுத்திருக்கிறார். வருகிற 11-ம் தேதி முதல்வரை சந்தித்து மனு கொடுக்க நாங்கள் வருகிறோம். எங்களோடு நீங்களும் இந்தப் பேரணியில் பங்கேற்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

More News

வில்லன்களுக்கெல்லாம் வில்லன் ரஜினி சார். கிஷோர் பெருமிதம்

சமீபத்தில் வெளியான 'கபாலி' படத்தின் டீசரில் 'யார்ரா அவன் கபாலி' வரச்சொல்லுடா அவனை' என்று அதிரடியாக வசனம் பேசி நடித்த கிஷோர்,

சந்தானத்தின் 'தில்லுக்கு துட்டு' ரிலீஸ் தேதி?

கோலிவுட்டின் முன்னணி காமெடி நடிகரான சந்தானம் சமீபத்தில் ஹீரோவாக பதவியுயர்வு பெற்று தற்போது ஹீரோவாக மட்டுமே ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

அமெரிக்க மருத்துவமனையில் ரஜினிகாந்த்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஓய்வு எடுப்பதற்காக அமெரிக்கா சென்றார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

ரெமோ ஃபர்ஸ்ட்லுக் மற்றும் சிங்கிள் டிராக் குறித்த தகவல்கள்

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'ரெமோ' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் தீம் மியூசிக் ரிலீஸ் தேதி 'கபாலி' படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக மாற்றப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் தீம் மியூசிக் வரும் 23ஆம் தேதி வெளிவரவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.,

'தனுஷின்' 'அம்மா கணக்கு' ரிலீஸ் தேதியில் மாற்றம்

தனுஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'அம்மா கணக்கு' படத்தின் டிரைலர் சமீபத்தில் ரிலீஸ் ஆகியது...